தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாமக்கல் மாவட்டம் சிலுவம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட அருந்ததியர் காலனி குடியிருப்பைச் சேர்ந்த ஹோமியோபதி மருத்துவர் ஜெயபிரகாசுக்கு கல்லூரியில் பணிபுரிவதற்கான பணி ஆணையை ஞாயிறன்று (ஜூலை 3) வழங்கினார். மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயாசிங், மற்றும் அரசு உயர் அதிகாரிகள் அப்போது உடனிருந்தனர்.