சென்னை,மே 25 - ஓமந்தூரார் மருத்துவமனையில் சிறப்பு மருத்துவர் குழு மூலம் சிகிச்சை பெற்றுவரும் மாணவி சிந்துவை முதல்வர் ஸ்டாலின் புதனன்று(மே 25) சந்தித்து நலம் விசாரித்தார். சென்னை கோடம்பாக்கம், வெள்ளாள தெருவை சேர்ந்தவர் சக்தி (43). இவர் டீ வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி தேவி (36). இவர்களுக்கு சிந்து என்ற பெண் உள்ளார். கடந்த 2020 டிசம்பரில், தோழி வீட்டின் மூன்றாவது மாடியில் சிந்து விளையாடியபோது, எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில், அவருடைய இரண்டு கால் எலும்புக ளும் முறிந்தன. தாடையின் ஒரு பகுதி முழுவதும் சேதமடைந்தது. அதன்பிறகு, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துமவனையில் அனு மதிக்கப்பட்டு, 10-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை மேற்கொள்ளப் பட்டது. இதில், உயிர் தப்பிய சிந்து இரண்டு ஆண்டுகளாக படுத்த படுக்கை யாகவே உள்ளார். இந்நிலையில், ஆசிரியர்கள், தோழி யர் உதவியுடன், வீட்டில் இருந்தப்படி படித்து, சமீபத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதினார். இது தொடர்பான செய்தி, அவரது தந்தை பேட்டியுடன் செய்தித் தளத்தில் வெளியானது.
மாணவி சிந்துவின் மருத்துவச் செலவை அரசே ஏற்கும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்து வமனையில் சில நாட்களுக்கு முன்னர் சிந்து அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிறப்ப மருத்துவர் கொண்ட குழு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நடப்பதற்கான பயிற்சி மருத்துவர்கள் மூலம் சிந்துவுக்கு அளிக்கப்படுகிறது. இந்த நிலையில்முதல்வர் ஸ்டாலின், சிந்துவை மருத்துவமனை யில் சந்தித்து நலம் விசாரித்தார். சிந்துவுக்கும் அளிக்கும் சிகிச்சை முறை களையும் முதல்வர் கேட்டறிந்தார். மாணவி சிந்துவுக்கு உற்சாகம் அளிக் கும் வகையில் பேசிய முதல்வர் ஸ்டா லின், சிந்துவுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார். முதல்வரின் இந்த சந்திப்பின்போது ஒமந்தூரார் மருத்து வமனையில் சிறப்பு மருத்துவர்கள், சுகாதாரச் செயலாளர் ராதாகிருஷ் ணன், சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்த னர். இதனிடையே, குடும்ப பொருளா தார நிலையை கருத்தில் கொண்டு, ஓராண்டு காலம் மருத்துவமனை வளாகத்தில் டீ வியாபாரம் செய்திட சிந்துவின் தந்தை சக்திக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.