சிவகங்கை, ஜூன் 8- சிவகங்கை மாவட்டம் சிங்கம் புணரி அருகே புனரமைக்கப்பட்ட 100 வீடுகள் கொண்ட கோட்டை வேங்கைப்பட்டி பெரியார் நினைவு சமத்துவபுரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜூன் 8 அன்று திறந்து வைத்தார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சியில் உருவான சமத்துவபுரம், அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டு, வீடுகள் பாழடைந்தன. சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் மு.க.ஸ்டாலின் அளித்த வாக்குறுதிப்படி கோட்டை வேங்கைப்பட்டி சமத்துவபுரம் புனரமைக்கப்பட்டது. இந்த சமத்து வபுரத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். சமத்துவபுரம் அருகே உள்ள காரை யூரில் நடைபெற்ற விழாவில் நலத் திட்ட உதவிகள் வழங்கி முதல்வர் சிறப்புரையாற்றினார். ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரிய கருப்பன் வரவேற்றுப் பேசினார். விழாவில் அமைச்சர்கள் கே.என். நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச் சந்திரன், ஆர்.எஸ்.ராஜகண்ணப் பன், பி.மூர்த்தி, நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம், ஊரக வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் பெ.அமுதா, மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, மானா மதுரை சட்டமன்ற உறுப்பினர் தமி ழரசி ரவிக்குமார், சிவகங்கை நகர் மன்ற தலைவர் துரைஆனந்த், திருப்புவனம் பேரூராட்சி தலை வர் சேங்கைமாறன், காஞ்சிரங்கால் ஊராட்சி மன்ற தலைவர் மணி முத்து, மாவட்ட ஊரக வளர்ச்சி முக மையின் திட்ட இயக்குனர் சிவ ராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மானாமதுரையில் அரசுக்கலைக்கல்லூரி தொடங்க வேண்டும் என்றும் வைகையாற் றின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என்றும் மானாமதுரை எம்எல்ஏ தமிழரசி தமிழக முதல்வ ரிடம் கோரிக்கை வைத்தார். தமிழகத்தை நம்பர் ஒன்னாக மாற்றுவோம் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டா லின் பேசியதாவது:
சாதியை ஒழித்து, தமிழை வளர்த்ததுதான் சமத்துவபுரம். சிவகங்கை மாவட்டத்தில் 9 சமத்து வபுரத்தில் 8 திறக்கப்பட்டுவிட்டது. கோட்டைவேங்கைப்பட்டி சமத்து வபுரம் ஆட்சி மாற்றத்தால் திறக்கப் படவில்லை. தற்போது தி.மு.க அரசு அமைந்ததும் ரூ.3.17 கோடி செலவில் சீரமைக்கப்பட்டு தற் போது திறக்கப்பட்டுள்ளது. மக்க ளுக்கான திட்டங்களை கடந்த அதி முக அரசு எப்படியெல்லாம் பாழ் படுத்தியது என்பதற்கு இதுவே சாட்சி. சமத்துவபுரத்தில் நாம் ஒற்று மையுடன் வாழ்ந்து, நாட்டையே சமத்துவபுரமாக மாற்ற வேண்டும் என்ற கலைஞரின் எண்ணத்தை நிறைவேற்ற வேண்டும். சிவ கங்கை அருகே, கிராமங்கள் பயன் பெறும் வகையில் சீல்டு கால்வாய் சீரமைக்கப்படும். 22 கோடி ரூபாய் செலவில் இந்த திட்டம் செயல் படுத்தப்படும். இதனால் 1800 ஏக் கர் பயனடையும். சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் மகப்பேறு மற்றும் குழந் தைகள் நலப்பிரிவில் ரூ.12 கோடிக்கு கூடுதல் படுக்கை வசதி ஏற்படுத்தப் படும்.
அரசு செலவழிப்பது கடைக் கோடி மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்பது அரசின் லட்சி யம். அரசு செயல்படுத்தும் திட்டங் கள் ஒவ்வொரு நபருக்கும் சென்ற டைய வேண்டும். அதனை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். செல் லும் இடமெல்லாம் மக்களின் வர வேற்புதான், எனக்கு கொடுத்த நற்சான்று. தேர்தலுக்கு முன் மக் களை சந்தித்ததை விட தற்போது தான் மக்களை அதிகளவு சந்திக்கி றேன். மக்களை தொடர்ச்சியாக சந்திப்பது ஆட்சியாளரின் முக்கிய இலக்கணமாக கருதுகிறேன். தமிழகத்தை நம்பர் ஒன்னாக மாற்றுவது தான் எனது நோக்கம். “தமிழகத்திற்காக நான் உழைக்கி றேன். எனக்கு பின்னால் ஸ்டாலின் தான் செயல்படுவார்” என்றார் கலைஞர். அதனை நான் காப்பாற்றி வருகிறேன். தொடர்ந்து கலைஞர் வார்த்தையை காப்பாற்றுவேன். ஐந்தாண்டில் செய்ய வேண்டி யதை ஓராண்டில் செய்துவிட்டேன். ஆரம்பத்தில் மட்டும் சுறுசுறுப்பாக இருப்பார் என நினைக்கலாம். நான் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பேன். கார்த்திக் சிதம்பரம் எம்.பி.யின் கோரிக்கைப்படி சிவ கங்கையில் வேலுநாச்சியார் பெய ரில் பெண் காவலர் பயிற்சி மையம் அமைக்க பரிசீலனை செய்யப் படும். இவ்வாறு அவர் பேசினார். ஊரக வளர்ச்சித்துறை அமைச் சர் பெரியகருப்பன் அவரது துறை யில் சிறப்பாக பணியாற்றி வருவ தாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டா லின் பாராட்டி வாழ்த்தினார். மாவட்டத்திலேயே வளர்ச்சித் திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் சிறப்பான பங்களிப்பு செய்வதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டிக்கு முதல்வர் வாழ்த்து தெரிவித்தார். இவ்விழாவில் ஆறாயிரம் பெண் கள் உள்ளிட்ட பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். விழாவின் தொடக்கத்தில் வாழ்வா தார இயக்க,தோட்டக்கலைத்துறை கண்காட்சியை முதல்வர் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து மக்களைச் சந்தித்து கைகுலுக்கி னார்.