tamilnadu

img

புதிதாக ஐந்து தொழிற்பேட்டைகள் முதலமைச்சர் திறந்து வைத்தார்

சென்னை, ஜூன் 27- செங்கல்பட்டு, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களில் 22620 நபர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தொழிற்பேட்டைகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மூலமாக செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம், ஆலத்தூர் கிராமத்தில் 67.96 ஏக்கரில்  ரூ.115.07 கோடியில் 2000 நபர்கள் நேரடி யாகவும், 4000 நபர்கள் மறைமுகமாக வும் வேலைவாய்ப்பு பெறும் வகையில் 192 தொழில் மனைகளுடன் பகுதி-ஐஐல் புதிதாக தொழிற்பேட்டை உருவாக்கப்பட்டுள்ளன. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், பெரிய கோப்பாயில் 57.181 ஏக்கர் பரப்பளவில் ரூ.11.82 கோடி  செலவில் 1800 நபர்கள் நேரடியாகவும், 4000 நபர்கள் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெறும் வகையில் 171  தொழில்மனைகளுடன் புதிய தொழிற்பேட்டை ஒன்றும் உருவாக்கப் பட்டுள்ளது.

சேலம் தெற்கு வட்டம், பெரிய சீரகப்பாடியில் 56.81 ஏக்கரில் ரூ.22.22 கோடியில் 1,000 நபர்கள் நேரடியாகவும், 2,000 நபர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகளை பெறும் வகையில், 79 தொழில்மனைகளுடன புதியதாக தொழிற்பேட்டை அமைத் துள்ளனர். நாமக்கல் வட்டம், ராசம்பாளையம் கிராமத்தில் 36.80 ஏக்கர் பரப்பளவில் ரூ.9.72 கோடி செலவில் 1,200 நபர்கள்  நேரடியாகவும், 2,500 நபர்கள்  மறைமுகமாகவும் வேலைவாய்ப் பினை பெறும் வகையில் 107  தொழில்மனைகளுடன் தொழிற் பேட்டையும் அமைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், ஆலங்குடி கிராமத்தில் 36.47 ஏக்கர் பரப்பளவில் ரூ.12.41 கோடி திட்ட மதிப்பீட்டில் 1,200 நபர்கள் நேரடியாகவும், 2,500  நபர்கள் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பினை பெறும் வகையில் 105 தொழில்மனைகளுடன் புதிதாக தொழிற்பேட்டை அமைத்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம், திருப் போரூர் வட்டம், தண்டரை கிராமத்தில் உள்ள ஒருங்கிணைந்த தொழில்நுட்ப ஜவுளி பூங்காவில் 0.56 ஏக்கரில், 5700 சதுர அடி கட்டட பரப்பில் வங்கி,  உணவகம், மருந்தகம், நிர்வாக அலுவலகம் மற்றும் கூட்டரங்கம் போன்ற வசதிகளுடன் தொழில் முனைவோர்களின் பயன்பாட்டிற்காக ரூ.2.22 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பொது வசதி கட்டடம்; மொத்தம் ரூ.171.24 கோடி மதிப்பீட்டில் 7200 நபர்கள் நேரடியாக வும், 15,000 நபர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகளை பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள 5 புதிய தொழிற்பேட்டைகள் மற்றும்  ரூ.2.22 கோடி மதிப்பீட்டில் கட்டப் பட்டுள்ள பொது வசதிக் கட்டடம் ஆகி யவற்றை தமிழக முதல்வர் மு.க.ஸ்டா லின் திங்களன்று (ஜூன் 27) திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில்,  அமைச்சர்கள் எ.வ. வேலு, தா.மோ. அன்பரசன், குறு,  சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவ னங்கள் துறை செயலாளர் வி. அருண் ராய், தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி  நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர்  டி. ஆனந்த், மற்றும் அரசு உயர் அலுவலர் கள் கலந்து கொண்டனர்.