செங்கல்பட்டு, பிப்.23- செங்கல்பட்டு மாவட்டம், சித்தாலப் பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் 50 லட்சமாவது பயனாளிக்கு மருந்துப் பெட்டகம் வழங்கி, அவருக்கு அளிக்கப்படும் இயன்முறை சிகிச்சையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், சித்தாலப்பாக்கத்தில் புதனன்று(பிப்.23) நடைபெற்ற நிகழ்ச்சியில், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 5 பயனா ளிகளுக்கு அவர்கள் இல்லம் தேடிச் சென்று மருந்து பெட்டகங்களை முதல்வர் வழங்கினார். புதிதாக 188 அவசரகால வாகனங்களின் சேவையையும் முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் 4 வாகனங்கள் மலைவாழ் மக்கள் பயன்பெறும் வகையில் ஊட்டி, வால்பாறை, அரசூர் (பொள்ளாச்சி) மற்றும் மோட்டம் பட்டி (கள்ளக்குறிச்சி) ஆகிய மலைப்பகுதி களில் செயல்படுத்தப்படும். மேலும், விபத்தினால் கால்களை இழந்த செல்வி சங்கீதா, முகமது ஷேக் அப்துல்லா ஆகியோருக்கு முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நவீன செயற்கை கால்களை முதல்வர் வழங்கி னார். சாலை விபத்தால் பாதிக்கப்பட்டவர்க ளுக்கு முதல் 48 மணி நேரத்திற்கான அவசர மருத்துவ சிகிச்சை செலவை தமிழ்நாடு அரசே மேற்கொள்ளும் வகையில் “இன்னு யிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48”திட்ட பயனாளிகளுடன் கலந்துரையாடினார்.
அப்போது கோவையில் இரண்டு சக்கர வாகன விபத்தில் சிக்கி படுகாயமுற்று பல மணிநேரம் அதிதீவிர அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு, குணமடைந்த மோகன்குமார் என்ற கல்லூரி மாணவனிடம் சிகிச்சை விவரங்கள் குறித்து அக்கறையுடன் கேட்டறிந்தார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தா.மோ. அன்பரசன், மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்க பாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதா கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.