குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தமது தமிழக பயணத்தை நிறைவு செய்து வெள்ளியன்று தில்லி திரும்பினார். அவருக்கு சென்னை விமான நிலையத்தில், “உணவு அளிப்பவரே உயிர் அளிப்பவர்” என்பதை பிரதிபலிக்கும் மாபெரும் தமிழ்க் காப்பியமான மணிமேகலையின் ஆங்கில மொழியாக்க நூலை அளித்து வழியனுப்பி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.