tamilnadu

img

விளையாட்டு வீரர்களுக்கு ரூ.4.85 கோடி ஊக்கத்தொகை: முதல்வர் வழங்கினார்

சென்னை,நவ.24- சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழா வில் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின், தேசிய மற்றும் பன்னாட்டு  விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 190 வீர்க ளுக்கு ரூ.4 கோடியே 85 லட்சத் திற்கான காசோலைகளை வழங்கினார். கொலம்பியாவில் 20 வயதிற் குட்பட்டோருக்கான உலக தடகள வாகையர் போட்டியில், மும்முறை (டிரிப்பிள் ஜம்ப்)  தாண்டும் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற செல்வபிரபு, 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டப்  பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற பரத் ஸ்ரீதர் ஆகியோ ருக்கு தலா ரூ.4 லட்சம் வீதம் மொத்தம் ரூ.8 லட்சம். இந்தோனேசியாவின் ஜாகர்தாவில் நடைபெற்ற ஆசிய கோப்பை வளைகோல்பந்தில் வெண்கலப் பதக்கம் வென்ற எஸ். மாரீஸ்வரன், எஸ். கார்த்தி  ஆகியோருக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் ரூ.20 லட்சம். சார்ஜாவில் நடைபெற்ற உயரம் குறைந்த மாற்றுத் திறனாளிகளுக்கான உலக அளவிலான விளையாட்டுப் போட்டியில் 100, 200 மீட்டர் தட களப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்ற பால சுப்பிரமணியனுக்கு ரூ.10 லட்சம். ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற செல்வராஜூக்கு ரூ.5 லட்சம் வழங்கப்பட்டது.

குண்டு, வட்டு எறிதலில் 2  வெண்கலப் பதக்கங்கள் வென்ற  விஜயசாரதிக்கு ரூ.4 லட்சம், ஈட்டி எறிதல் மற்றும் வட்டு  எறிதல் போட்டியில் 2 வெண் கலப் பதக்கங்கள் வென்ற கணே சனுக்கு ரூ.4 லட்சம். இதேபோல், குஜராத்தில் நடைபெற்ற 36-வது தேசிய விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த  180 வீரர்களுக்கு ரூ.4  கோடியே 29 லட்சமும் வழங்கப்பட்டது. இந்த விழாவில் அமைச்சர் கள் பி.கே. சேகர்பாபு, சி.மெய்ய நாதன், தயாநிதி மாறன் எம்.பி., முதன்மைச் செயலாளர் அபூர்வா, தமிழ்நாடு விளை யாட்டு மேம்பாட்டு ஆணைய தலைமை செயல் அலுவலர் கார்த்திகேயன், துணைத் தலை வர்கள் ராமச்சந்திரன், அசோக் சிகாமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.