பேராசிரியை விமலாவுக்கு முதல்வர் வாழ்த்து!
சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வான பேராசிரியை விம லாவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மலையாள மொழி சுயசரிதை புத்தகத்தை ப. விமலா தமிழில் செய்த மொழிபெயர்ப்பு உள்பட 21 மொழிபெயர்ப்பு புத்த கங்களுக்கு 2024-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழிபெயர்ப்புக்கான தேர்வுக்குழுவில் இந்திரன், டாக்டர் ஜி. சுந்தர், எஸ்.பக்தவத்சல பாரதி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இவர்களின் பரிந்துரைப்படி ‘என்டே ஆணுங்கள்’ என்ற நளினி ஜமீலாவின் மலையாள மொழி சுயசரிதை புத்தகத்தை ‘எனது ஆண்கள்’ என்ற பெயரில் தமிழில் மொழி பெயர்த்த ப. விமலாவின் படைப்பு சிறந்த தமிழ் மொழிபெயர்ப்பு நூலாக தேர்வு செய்யப்பட்டது. இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறும் விழாவில் சிறந்த மொழி பெயர்ப்பாளர்களுக்கு ரூ. 50 ஆயிரம் பரிசுத்தொகை மற்றும் தாமிரப்பட்டயம் வழங்கப்படும் என்று சாகித்ய அகாடமி தெரிவித்துள்ளது. இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய சமூக வலைதளப் பதிவில் ப. விமலாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவருடைய வாழ்த்துச் செய்தியில், “‘எனது ஆண்கள்’ நூலுக் காக 2024-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமியின் மொழி பெயர்ப்பு விருதுக்குத் தேர்வாகி இருக்கும் ப. விமலா அவர் களுக்கு எனது பாராட்டுகள். கல்விப்புலத்தில் இருந்து இலக்கிய மொழிபெயர்ப்புகளில் ஈடுபடும் தங்களின் பாராட்டத்தக்க பணி தொடர வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.