இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்ததால், பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தையை பெற்றோரே எருக்கம்பால் கொடுத்து கொலை செய்துள்ள கொடூரம் நிகழ்ந்துள்ளது.
உசிலம்பட்டி அருகேயுள்ள புள்ளநேரி மீனாட்சிபட்டியைச் சோ்ந்தவா் வைரமுருகன். இவரது மனைவி செளமியா. இவா்களுக்கு ஏற்கெனவே இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் செளமியாவுக்கு செல்லம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த ஜனவரி 1-இல் இரண்டாவது பெண் குழந்தை பிறந்துள்ளது.
இதனைத்தொடா்ந்து பெண் குழந்தை உடல்நலக்குறைவால் இறந்ததாகக்கூறி மார்ச் 2-இல் குழந்தையின் சடலத்தை பெற்றோர் புதைத்துள்ளனா். இதையடுத்து கிராம நிர்வாகி அதிகாரி மந்தக்காளை செக்கானூரணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வியாழக்கிழமை சென்ற காவல்துறையினர் குழந்தையின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். இரண்டாவதும் பெண் குழந்தையாக பிறந்ததால் எருக்கம்பால் கொடுத்து குழந்தையை கொலை செய்து புதைத்தது தெரிய வந்தது. இதற்கு வைரமுருகனின் தந்தை சிங்கத்தேவனும் உடந்தையாக இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து உசிலம்பட்டி அரசு மருத்துவமனை மருத்துவா் குழு, உசிலம்பட்டி வட்டாட்சியா் செந்தாமரை, துணை கண்காணிப்பாளா் ராஜா ஆகியோர் முன்னிலையில் குழந்தையின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் வைரமுருகன், செளமியா, சிங்கத்தேவன் ஆகிய மூவரையும் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.