அறிவினைத் தூண்டாது மலைபோல மூளையை
அமிழ்த்தும் சாத்திரம் எரிப்பீர்!
ஆஷாட பூதிகள் பொம்மலாட் டங்களுக்(கு)
அடிமை ஆகாது வாழ்வீர்!
வறிய குள்ளச் சமூகந்தரும் கட்டுகளை
மண்ணாய்ப் பொடித்தெறிகுவீர்!
வாழவொட் டாது அரித்து உண்ணும் விஷப்பூச்சி
வன் புரோகிதம் ஒழிப்பீர்!
மறியலே செய்து முற்போக்கைத் தடுத்திட்ட
மதம்எனும் பாம்பு கொல்வீர்!
மனிதரை விழுங்கிடும் தனிடடைமை - யாம்பேயை
மண்டையில் அடித்து மாய்ப்பீர்!
குறியோடு கொள்கையும் புதுஉலகு காண்பதில்
கொண்டுநல் தொண்டுசெய்வீர்!
கோதிலாச் சமதர்மம் ஓங்குதற்கே என்று
கூடிவருவீர் தோழர்களே ! (1935)