tamilnadu

img

நெருங்கும் உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தல் - வாய்ச்சவடால் மோடி

மோசடி அறிவிப்புகளை பார்த்து பாஜகவினரே அதிர்ச்சி

உத்தரப்பிரதேசத்தில் சட்ட மன்றத் தேர்தல்கள் நெருங்குவதையொட்டி மோடியின் வாய்ச்சவடால் அறிவிப்புகளும் அதி கரித்துக்கொண்டிருக்கின்றன. உத்தரப்பிரதேசத்தில் விரை வில் சட்டமன்றத் தேர்தல்கள் நடை பெறுவதையொட்டி, வாரணாசியில் டிசம்பர் 23 அன்று பல்வேறு திட்டங் களைத் தொடங்கி வைத்து பிரதமர் மோடி உரையாற்றுகையில், இத்திட்டங்கள் அனைத்தும் 1 லட்சத்து 01 ஆயிரத்து 695 கோடி ரூபாயில் கட்டப்படும் என்று கூறி அடிக்கல் நாட்டியிருக்கிறார். மோடி ஆட்சிக்கு வந்தபின் கடந்த ஏழாண்டுகளில் இதேபோன்று எண்ணற்ற தடவை வாய்ச்சவடால் அடித்திருக்கிறார். எந்த அறிவிப்பாக இருந்தாலும் அது ஒரு லட்சம் கோடி ரூபாய்க்குக் குறைவாக இருக்காது. இதுதான் பாஜக தலைமையிலான அரசாங்கங்களின் நிலையான நடை முறை வழக்கமாகும்.  இவ்வாறு அறிவிப்பு விழா நடக்கும்போதெல்லாம் ஏராளமான வாக்குறுதிகள் அள்ளிவீசப்படும். அந்தக்கூட்டங்களில் கலந்து கொண்ட உள்ளூர் தலைவர்கள் தொலைக்காட்சிகளில் காட்டப்படு வார்கள். மறுநாள் காலை வெளி யாகும் செய்தித்தாள்களிலும் இடம் பெறுவார்கள்.

இத்தகைய மோசடிகள் இப்போது உத்தரப்பிரதேசத்திலும் தொடங்கிவிட்டன. பரந்துவிரிந்து கிடக்கும் உத்தரப்பிரதேச மாநி லத்தில் வாழும் 24 கோடி பேர் வரும் பிப்ரவரி மாத இறுதியில் சட்ட மன்றத் தேர்தலைச் சந்திக்க இருக் கிறார்கள். இதற்காக தேர்தல் ஆணை யத்தின் அறிவிப்பு வரும் ஜனவரி முதல் வாரத்தில் வெளியிடப்படலாம். அதன்பின்னர் தேர்தல் நடத்தை விதி அமலாவதால் அரசாங்கம் பெரிய அளவிலான திட்டங்களுக்கு அறிவிப்புகள் செய்வது தடை செய்யப்பட்டுவிடுமாதலால், இப்போதே மோடி முன்பு ஆண்டு க்கு 2 கோடி பேருக்கு வேலைகள் வழங்கப்படும் என்று வாக்குறுதியை அள்ளிவீசியது போன்று, இப்போதும் பல லட்சம் கோடி ரூபாயில் பல்வேறு நலத்திட்டங்களை அறி வித்திருக்கிறார்.  இப்போது பிரதமர் மோடி, பாஜக-வின் உயர்மட்ட தலைவர் களுடன் மாநிலத்தின் பல பகுதி களில் கூட்டங்கள் நடத்துவதும், கோவில்களுக்குச் செல்வதும், பொது மக்களில் முன்கூட்டியே தேர்வு செய்யப்பட்ட சிலருடன் பேசு வதுபோல் பாவனை செய்வதும் –  இவை அனைத்தும் தேவையான கேமராக்கள், செயற்கைக்கோள் வேன்கள், ட்ரோன்கள் முதலான வைகளுடன் நடந்துகொண்டிருக் கின்றன.

ஆதரவாளர்களே கேள்வி எழுப்புகிறார்கள்

ஆனாலும் பாஜக ஆதரவாளர் களே இது தொடர்பாக எண்ணற்ற வினாக்களைக் கேட்கிறார்கள்:  மோடி அறிவித்திருக்கும் திட்ட ங்கள் எல்லாம் அருமையாகத்தானே இருக்கின்றன. அவற்றை ஏன் உடனே செயல்படுத்தக்கூடாது? அவற்றை நிறைவேற்றுவதற்காக சட்டமன்றத் தேர்தல்கள் முடியும் வரை ஏன் காத்திருக்க வேண்டும்? இதற்கு முன்பும் மோடி இத்திட்டங்கள் தொடர் பாக பல முறை வாக்குறுதிகள் அளித்திருக்கிறாரே, அவற்றை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கை களை ஏன் இதுவரை தொடங்க வில்லை. இப்போது யோகி ஆதித்ய நாத் ஆட்சி முடிவடையும் சமயத்தில் இவற்றை மீண்டும் மோடி ஏன் கூறிக்கொண்டிருக்கிறார்? இவ்வாறு படாடோபமாக அறி விக்கப்படும் அரசின் அறிவிப்புகளு டன், பாஜக-வின் அறிக்கைகளும் இணைக்கப்படுவது ஏன்? பாஜக வினரைத் தவிர வேறெந்தக் கட்சி யைச் சேர்ந்தவரையும் அரசு விழாக் களுக்கு அழைக்காதது, ஏன்? வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சிறுபான்மை இனத்தினருக்கு எதி ராக விஷத்தைக் கக்குவது ஏன்?

அரசின் நீர்ப்பாசனத் திட்டத் தையோ, சூரிய ஒளி பூங்காவையோ அல்லது ஒரு மருத்துவமனையையோ திறந்து வைக்க பிரதமரோ அல்லது முதல்வரோ வந்தால், அது நல்லது தான், அதற்காக ஒரு பொது நிகழ்ச்சி யை நடத்துவதும் நல்லதுதான். ஆனால் இவ்வாறு ஒரு நிகழ்ச்சிக்கு அரசாங்கத்தின் பணம் வாரியிறைக் கப்பட்டு செலவு செய்யப்படும் போது, அதில் இந்தத் திட்டங்கள் அறி விக்கப்படும்போது, நிச்சயமாக அது தேர்தல் பிரச்சாரமேயன்றி  வேறென்ன? இவ்வாறு செய்வது மக்களின் பணத்தை, தங்கள் கட்சியின் சுய லாபத்திற்காக, துஷ்பிரயோகம் செய் வதாகாதா? இவை தேர்தல் நடத்தை விதிகளின் உணர்வை மீறும் செயல் களாகாதா? தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு ஒருசில நாட்களில் வரக் கூடிய நிலையில் இவ்வாறு மிக மோச மானமுறையில் நடந்து கொள்ள லாமா?

70 சதவீதம் நிதி எதற்காக?

இப்போது மோடி அறிவித்திருப்ப தில் அதிவிரைவு சாலைப் போக்கு வரத்துக்கும், விமான தளங்களுக் கும்தான் ஏராளமாக வாரி இறைக்கப் பட்டிருக்கிறது. மீரட்டையும், பிர யாக்ராஜ் (அலகாபாத்)ஐயும் இணைத் திடும் கங்கா அதிவிரைவு சாலைக்கு 36,230 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டி ருக்கிறது.  லக்னோ-காஸிபூர் இணைத்திடும் பூர்வாஞ்சல் அதி விரைவு சாலைக்கு 22,496 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஜேவர் மற்றும் குஷிநகர் என்னும் இரண்டு விமான தளங்கள் ஏற்படுத்து வதற்கு 10,760 கோடி ரூபாய். ஆக மோடி அறிவித்துள்ளதில் 70 சதவீதம் இவற்றுக்கு மட்டும் ஒதுக்கப்பட்டி ருக்கிறது.

ஆனால் இந்த மாநிலத்தில் கிரா மப்புற சாலைகள் மிகவும் மோசமாக உள்ளன. சுகாதார நிலையங்க ளுக்குச் செல்லும் பாதைகள் கேடு கெட்டவையாக உள்ளன. இதே போன்று அதிவிரைவு சாலைகளுக் கும் விமான தளங்கள் கட்டுவதற் கும் 70 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி யிருப்பது என்பது, கேலிக்கூத்தான ஒன்றில்லையா? நாட்டிலேயே அதிக மாக வறுமை நிலையில் உள்ளோர் வாழும் மாநிலத்திற்கு இத்தகைய அதிவிரைவு சாலைகளும், விமான தளங்களும் இப்போது தேவை தானா? சமீபத்தில் நாட்டைப் பீடித்த கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்க முடியாத அள விற்கு அடிப்படை சுகாதார வசதிகள் இல்லாத ஒரு மாநிலத்திற்கு இவை அவசியம்தானா?

மோடியின் அறிவிப்பால் ஒருசில  ஆயிரம் தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கலாம். ஆனாலும் அதனைவிட மிகப்பெரிய அளவில் இதனால் ஆதாயம் அடையப்போவது கார்ப்பரேட் கட்டுமான நிறுவனங்க ளும், அவற்றுடன் இணைந்து செயல் படும் துணை ஒப்பந்தக்காரர்களுமே ஆவர். பாஜக இவ்வாறு திட்டங்களைக் கொண்டுவந்தாலும், இது அதற்கு மக்களிடமிருந்து வாக்குகளை வென்றெடுப்பதற்கு உதவிடுமா? சந் தேகம்தான். இவ்வாறு படாடோப மாக பல திட்டங்களை அறிவித்தா லும், அவை எல்லாம் தேர்தல்களில் வெற்றி பெற உதவிடாது. ஆனாலும், பாஜக இப்படித்தான் தேர்தல்களை அணுகிக் கொண்டிருக்கிறது.  பணத்தை வாரி இறைப்போம், மக்க ளுக்கு இனாம்களை வாரி வழங்கு வோம். அவற்றுக்கு “வளர்ச்சி” என்று பெயர் சூட்டுவோம். அவர்கள் நமக்கு வாக்களித்துவிடுவார்கள் என பாஜக கருதிக்கொண்டிருக்கிறது. 

இத்துடன் உத்தரப்பிரதேசத் தேர்தலுக்காக பாஜக வேறு சில உத்திகளையும் கையாண்டுகொண் டிருக்கிறது. மதவெறி நிகழ்ச்சிநிரலை  தேர்தல் சமயத்தில் உக்கிரமாக நடை முறைப்படுத்துகிறது. சாதிக் கூட்ட ணிகளையும் ஏற்படுத்தி, வாக்குறுதி களை அள்ளிவீசுகிறது. ஊடகங்க ளுக்கும், விளம்பரங்களுக்கும் கோடிக் கணக்கான ரூபாய் செலவு செய்கி றது. எதிர்க்கட்சியினரை துன்புறுத் திட (இது உத்தரப்பிரதேசத்தில் ஏற்க னவே தொடங்கிவிட்டது) அமலாக் கத்துறையினரையும், வருமான வரித்துறையினரையும், குற்றப் புல னாய்வுக் கழகத்தினரையும் பயன் படுத்துகிறது. இந்தக் கலவை உத்த ரப்பிரதேசத்தில் படிப்படியாக அதி கரித்துக் கொண்டிருக்கிறது.

மண்ணைக் கவ்வுவது நிச்சயம்

எனினும், 2014இல் பாஜக நாடாளு மன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற பின் னர், பல மாநிலங்களில் பாஜக அர சாங்கங்கள் தூக்கி எறியப்பட்டன. சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகா ஆகிய மாநி லங்களை பாஜக இழந்தது. கேரளம், மேற்கு வங்கம், தமிழ்நாடு, தில்லி, தெலங்கானா, ஆந்திரம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் வெற்றிபெற முடியாமல் படுதோல்வி அடைந்தது. தன்னுடைய கூட்டணிக்கட்சி கை விட்டதைத்தொடர்ந்து மகா ராஷ்ட்டிராவிலும் தோல்வி அடைந் தது. பீகாரிலும் அநேகமாக அது தோல்வி அடைந்த நிலைதான். தன் சொந்த மாநிலமான குஜராத்திலும் அதன் செல்வாக்குக் கடுமையாக சரிந்துவிட்டது. வடகிழக்கில் உள்ள சிறிய மாநிலங்களிலும்கூட தேர்தல் களில் அது பரிதாபமான நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது. ஆயினும் அங்கே பின்பற்றிய அதே உத்தியைத்தான் இப்போது உத்தரப்பிரதேசத்திற்கும் மோடி பயன்படுத்துகிறார். என்னதான் தலை கீழாக நின்றாலும் உத்தரப்பிர தேசத்தில் இந்தத்தடவை பாஜக மண்ணைக் கவ்வுவது நிச்சயம்.

நியூஸ்கிளிக் இணைய இதழில் இருந்து
தொகுப்பு :  ச.வீரமணி