tamilnadu

img

ஓய்வுபெற்றோர் பணத்தை தராமல் இழுத்தடிப்பது மிகப்பெரிய அநீதி

சென்னை, ஏப். 26- 77 மாத அகவிலைப்படி உயர்வை  உடனே நிலுவையுடன் வழங்க வேண்டும், மருத்துவக் காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் சார்பில் சென்னை பல்லவன் இல்லம் முன்பு செவ்வாயன்று (ஏப். 26) தொடர் காத்திருப்புப் போராட்டம் தொடங்கியது. 2020க்குப் பின் விருப்ப ஓய்வு மற்றும் பணியில் இறந்தவர்களின் பணப்பலன் களை உடனே வழங்க வேண்டும், 14 ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை யை விரைவில் பேசித் தீர்க்க வேண்டும்  ஆகிய கோரிக்கைகளையும் வலி யுறுத்தி காத்திருப்புப் போராட்டம் நடை பெற்றது. இந்தப் போராட்டத்தை போக்குவரத்து ஊழியர் சம்மேள னத்தின் தலைவர் அ.சவுந்தரராசன் துவக்கி வைத்து பேசியதாவது: ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் சலுகைகளை எப்படி பறிக்கலாம் என்று யோசிப்பது அரசின் அடிப்படை வேலையாக மாறிவிட்டது. 2020க்குப்  பிறகு விருப்ப ஓய்வில் சென்றவர் களுக்கும், இறந்தவர்களுக்கும் கூட இன்னும் ஓய்வுக்கால பலன்கள் வழங்கப் படவில்லை. ஓய்வுக் காலத்தை 62ஆக  உயர்த்தினால் என்ன என்ற ஆலோச னையும் நடைபெற்றுக் கொண்டிருக் கிறது. சாகும் வரை பணி செய்து விட்டுச்  செல்லுங்கள் எனக் கூறினாலும் ஆச்சரி யப்படுவதற்கில்லை. 

வயதான காலத்திலும் உழைப் பாளி மக்களைச் சுரண்டுவது, கொள்ளையடிப்பது, ஏமாற்றுவது, உழைப்பாளியின் பலனை திருடுவது என்பதுதான் முதலாளித்துவ சமூக த்தின் ஏற்பாடாக உள்ளது. 58 வயதில் ஓய்வு பெற்ற பிறகும் தொழிலாளர்கள் தொடர்ந்து போராட வேண்டிய நிலை நீடிக்கிறது. 2017ஆம் ஆண்டில் இருந்து 77 மாதங்களாக வழங்கவேண்டிய அகவிலைப்படியை தரமறுக்கிறார்கள். இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்ற இறுமாப்போடு பணத்தை வழங்காமல் இழுத்தடிக்கிறார்கள்.  ஓய்வுபெற்ற பிறகு அவரது மகன், மகள் திருமணம் உள்ளிட்ட குடும்பத் தேவைகளுக்கு பயன்பட வேண்டிய பணத்தை அரசு வைத்துக் கொண்டி ருப்பது மிகப்பெரிய அநீதியாகும். அகவிலைப்படியை கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விடும் எனக் கூறி அனுமதி மறுக்கிறார்கள். அப்படி யென்றால் எந்த சட்டத்தின்படி அக விலைப்படியை, ஓய்வுக்கால பலன் களை தர மறுக்கிறீர்கள்?.  2004ஆம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்ந்தவர் களுக்கு எந்த பலனும் கிடையாது என்றால் என்ன நியாயம்? அவர்களி டம் இருந்து பிடிக்கப்பட்ட பணம் என்ன வானது? எங்கே இருக்கிறது? தொழி லாளர்கள் உழைப்புதான் ஓய்வூதியமே தவிர பிச்சையல்ல. கடந்த அதிமுக ஆட்சி தொடர்ந்து ஏமாற்றியது. ஆனால் புதிய ஆட்சி அமைந்து ஒரு வருடம் ஆகி யும் இன்னும் கோரிக்கைகள் நிறை வேற்றப்படாமல் நிலுவையில்உள்ளது.

மக்களின் நலன் கருதியே வேலை  நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட வில்லை. அரசு இனியும் உரிய தீர்வு காணவில்லை என்றால், பொதுமக்கள் ஆதரவோடு வேலை நிறுத்தப் போரா ட்டத்திற்கு செல்வோம். அதையொட்டி ஓய்வூதியர்களும் சாலைக்கு வரு வார்கள், சிறையை நிரப்புவார்கள் என்பதை ஆட்சியாளர்கள் உணர  வேண்டும். எந்த புதிய கோரிக்கையை யும் நாம் கேட்கவில்லை. விதிகளின் படி  வழங்க வேண்டிய பலன்களை மட்டுமே  கேட்கிறோம்.  நிரந்தரத் தொழிலாளர் களும், ஓய்வுபெற்ற தொழிலாளர் களும் சங்க வித்தியாசமில்லாமல் ஒரு  குடையின் கீழ் திரண்டு போராடுவோம், பொது போக்குவரத்தைப் பாதுகாப் போம். இவ்வாறு அவர் பேசினார். தலைவர் எஸ்.கிருஷ்ணன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் கே.கர்சன், பொருளாளர் ஏ.வரதராஜன் துணைப் பொதுச்செயலாளர்கள் பி.செல்வராஜன், ஆர்.தேவராஜ், கே.வீரராகவன், மாநில நிர்வாகிகள் ஜி.ராமச்சந்திரன், ஏ.ரைமண்ட், எம். சந்திரன், சேதுராமன், சண்முகம், முத்துக்குமார், மாநகர போக்குவரத்து ஊழியர் சங்க பொதுச் செயலாளர் வி.தயானந்தன் ஆகியோரும் பேசினர். இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

இதற்கிடையே போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரனை சங்கத்தின்   தலைவர் எஸ்.கிருஷ்ணன், பொதுச்செயலாளர் கே.கிருஷ்ணன், மாநில நிர்வாகிகள் துணைப் பொதுச்செயலாளர்கள் பி.செல்வராஜன், ஆர்.தேவராஜ், கே.வீரராகவன், மாநில நிர்வாகி ஏ.ரைமண்ட் ஆகியோர் சந்தித்து மனு அளித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அமைச்சர் உங்கள் கோரிக்கைகள் குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று சாதகமான முடிவு எடுக்கப்படும் என  தெரிவித்துள்ளார்