பாலஸ்தீனத்தின் நெகேவ் (Negev) பாலைவனத்தில் பெடொய்ன் பழங்குடி மக்கள் பல கிராமங்களில் வாழ்கின்றனர். இவர்களை வெளி யேற்றி இஸ்ரேலியர்களை குடி யமர்த்த பலமுறை இஸ்ரேல் முயற்சி செய்துள்ளது. அல்- அரா குயிப் என்ற கிராமம் மட்டும் 196 முறை இஸ்ரேலின் தாக்குத லுக்கு உள்ளாகியுள்ளது. பாலஸ்தீ னர்களை அவர்கள் வாழும் இடங்க ளில் இருந்து முற்றிலும் அகற்று வதே இஸ்ரேலின் நோக்கம். ‘யூதர் களின் தேசிய நிதி’ என்ற நிதியிலி ருந்து பாலைவனத்தை சோலை வனமாக்குவோம் எனக்கூறிக் கொண்டு பெருமளவில் மரங்களை நடுகின்றனர். இஸ்ரேலிய குடி யேறிகளும், இஸ்ரேலின் வலது சாரி அமைப்புகளும், இஸ்ரேலின் ராணுவமும் கூட்டாக பழங்குடி மக் களை அவர்கள் வாழும் பாலை வன கிராமங்களில் இருந்து வெளி யேறுகின்றனர்.
பல பத்தாண்டுகளாக இஸ்ரே லின் இத்தகைய நாசகர நடவ டிக்கைகளை எதிர்த்து பாலஸ்தீனர் போராடி வருகின்றனர். எத்தனை முறை தங்கள் கிராமம் அழிக்கப் பட்டாலும் பாலஸ்தீனர்கள் திரும்பத்திரும்ப தங்கள் கிரா மத்தை புனரமைக்கின்றனர். ஜனவரி 13 அன்றும் இஸ்ரேல் இவ்வாறான பெடோய்ன் பழங்குடி மக்களை அவர்களின் கிராமங்களி லிருந்து அகற்றும் வகையில் தாக்கு தல் தொடுத்தது. பாலஸ்தீனர் களுக்கு குடிநீர், சுகாதார சேவை கள் உள்பட அனைத்து சேவை களும் துண்டிக்கப்பட்டன. ஜனவரி 13-இல் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிராக காஸா பகுதியில் வாழும் பாலஸ்தீனர் மற்றும் உலகெங்கும் உள்ள பாலஸ்தீனர் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் பலரும் 18 வயதுக்கு கீழ் உள் ளோர், மூன்று பெண்கள், ஒரு பத்தி ரிகையாளர் உள்பட கைது செய் யப்பட்டனர். ரப்பர் பூசிய துப் பாக்கி ரவை கொண்டு பாலஸ்தீனி யர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப் பட்டது. கண்ணீர் புகை குண்டு கள் வீசப்பட்டன. ஜனவரி 15 இல் மீண்டும் பாலஸ்தீனர்கள் ஆர்ப் பாட்டம் நடத்தினர். கடந்த ஆண்டு மனித உரிமை காப்பாளர்கள் குறித்த ஐநா சிறப்பு பதிவாளர், அயர்லாந்தின் மேரி லாலெர் வெளியிட்ட அறிக்கைப்படி, 2015-க்கும் 2019-க்கும் இடையே 64 நாடுகளில் 1300 மனித உரிமை காப்பாளர்கள் கொல்லப்பட்டுள்ள னர். இதில் பலர் பாலஸ்தீனர்கள். பாலஸ்தீனியர் பலரும் நிர்வாக உத்தரவு மூலம் சிறைகளில் தள் ளப்படுகின்றனர். பாலஸ்தீனி யர்களின் உரிமைகளுக்காக நேசக் கரம் நீட்டுவோம்!