சென்னை,அக்.9- தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் வருகிற 11 ஆம் தேதி வரை நடை பெறும் என பேரவைத் தலைவர் மு. அப்பாவு தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத் தொடர், சென்னை தலைமைச் செயல கத்தில் உள்ள பேரவை மண்டபத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு தலை மையில் திங்களன்று (அக்.9) காலை 10 மணிக்குக் கூடியது. அதனைத் தொடர்ந்து அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெற்றது. அதில், அக்.11 ஆம் தேதி வரை சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது.