tamilnadu

img

போட்டித் தேர்வு - “ஆமைகள்” வெல்கின்றன! - ஹரி

எறும்புகள் வரிசையாக ஊர்ந்து கொண்டிருந்தன. முதலில் சென்ற எறும்பு என் பின்னால் இருவர் வருகிறார்கள் என்றது. அடுத்த எறும்பு என் பின்னால் ஒருவர் வருகிறார் என்றது. கடைசி எறும்பு, என் பின்னால் இருவர் வருகிறார்கள் என்றது. “அதெப்படி” என்று வினா எழுப்புவார்கள்.  நாம் முழிப்போம். “அது பொய் சொல்லுச்சாம்” என்றவுடன் சிரித்துக் கொண்டே நகருவோம்.  இதை ஒருமுறை ஒருவர் நேர்முகத்தேர்வுக்கான வழிகாட்டல் நிகழ்வில் சொன்னார். அருகில் அமர்ந்திருந்த ஒருவர் “இப்படிலாமா நேர்முகத்தேர்வில் கேட்பார்கள்” என்று கிசுகிசுத்தார். அதற்குள் மேடையில் இருந்த வழிகாட்டியே, “இப்படிலாம் கேட்க மாட்டார்கள். ஆனால், மொழியறிவைச் சோதிக்க இப்படிப்பட்ட அணுகுமுறையைக் கடைப்பிடிப்பார்கள்” என்று விளக்கினார்.

இப்படியும் கேட்பார்கள்..!

ஒரு நேர்முகத் தேர்வு அறைக்குள் நுழைந்த வர், வினாக்களை எழுப்ப ஒரேயொருவர்தான் இருப்பதைப் பார்த்து வியந்தவாறே நாற்காலி யில் அமர்ந்தார். அதுதான் அவர் சந்திக்கும்  முதல் நேர்முகத் தேர்வாகும். சரியாக அமர்ந்தி ருக்கிறோமா என்பதைப் பார்ப்பதற்குள் வினா  வந்து விழுந்தது. “When did you die...?” ஒரு கணம் தூக்கிவாரிப் போட்டது. அப் போது வினா எழுப்புபவருக்காக தேநீர் கொண்டு  வந்தவர், ‘தேர்வருக்கு கால்கள் இருக்கிறதா’ என்று நோட்டமிட்டார். சுதாரித்துக் கொண்ட தேர்வர், “Sir.. I am  alive. And, I am sitting infront of you” என்றார். அடுத்து எந்த வினாக்களும் எழவில்லை. அவர் தேர்வானார்.  நேர்முகத் தேர்வுகள் என்பது எழுப்பப்படும் வினாக்களுக்கு விடை தெரிகிறதா என்பதற்கா னது மட்டுமல்ல. ஒருவேளை, வினாவுக்கான விடை தெரியவில்லை என்றால், அதை எப்படிச்  சொல்கிறீர்கள் என்பதைச் சோதிக்கிறார்கள். தெரியவில்லை என்றால், எதையாவது சொல்லிச் சமாளிக்கப் பார்ப்பது, தலையைச்  சொறிவது உள்ளிட்டவற்றை விரும்புவதில்லை.  எனக்குத் தெரியாது என்பதை தெளிவாகச்  சொல்கிறீர்களா என்பதுதான் முக்கியமானதா கும். உட்காரும் நிலையில் இருந்து, வெளியில்  செல்லும் வரையில் உங்கள் நடவடிக்கைகளை அவர்கள் ஆய்வு செய்வார்கள். நேர்முகத் தேர்வுக்கான வழிகாட்டுத லின்போது, “ஜெயலலிதா முதல்வராக இருக்கும்போது அமைச்சரவைக் கூட்டங்கள் நடத்துவதை டி.வி.யில் பார்த்திருக்கிறீர்களா” என்று வழிகாட்டி கேட்டார். “பார்த்திருக்கிறோம்” என்று எல்லாருமே தலையாட்டினார்கள். “அப்போது அவர் முன்பாக, ஓ.பன்னீர்  செல்வம் அவர்கள் எப்படி உட்கார்ந்திருக்கி றாரோ, அப்படித்தான் நீங்கள் நேர்முகத் தேர்வில் அமர வேண்டும்” என்றார். “அவரிடம்  எந்தவிதமான தேவையற்ற அசைவுகளும் இருக்காது. கேட்டால் மட்டும், கேட்டதற்கு மட்டும் விடையளிப்பார்” என்று மேலும் விளக்கி னார்.

பேரு மட்டும் மறந்துருச்சு..!!

எனக்கு இவ்வளவுதான் தெரியும் அல்லது  இவ்வளவு தெரியும் என்பதைக் கூட நேர்முகத்  தேர்வில் காட்டலாம். தெரிந்ததை ஒரு தடை யற்ற வகையில் சொன்னால், கேட்பவர்க ளுக்குப் பிடித்துப் போய்விடும்.  ஒரு நேர்முகத் தேர்வில், தற்போதைய மக்க ளவை சபாநாயகர் யார் என்று கேட்டிருக்கி றார்கள். “மீராகுமார்” அடுத்த வினாவுக்கு சென்று விடுவார்கள் என்று தேர்வர் எதிர்பார்த்தார். ஆனால் அவர் களோ,“அவரோட அப்பா பெயர் என்ன?” ஒரு நிமிடம் யோசித்த தேர்வர், “சார்.. அவர்  பள்ளிக்கூடத்துல படிக்குறப்ப, ரெண்டு பானைல தண்ணி இருக்கும். ஒண்ணு பட்டியலி னத்தவங்களுக்கு.. மற்றது பிற சாதிக்கா ரங்களுக்கு.. இவரு பட்டியலினத்தவரு... அவங்களுக்கான பானைல தண்ணி இல்ல.. அடுத்த பானைலருந்து தண்ணி எடுத்துக் குடிச்சுட்டாரு. அதப்பாத்த தலைமை ஆசிரியர் பிரம்பு எடுத்து விளாசிட்டார். தலைமை ஆசிரி யர் அந்தப்பக்கம் நகர்ந்த பிறகு, வந்த கோபத்துல ரெண்டு பானையையும் போட்டு  உடைச்சாரு. நாட்டுக்கு விடுதலை கிடைச்சுல ருந்து 32 வருஷம் தொடர்ந்து ஒன்றிய அமைச்சரா இருந்தாரு.. துணைப் பிரதமராவும்  ஆனாரு.. ஆனா அவரு பேரு மட்டும் நினைவுல  வர மாட்டேங்குது சார்”னு சொன்னவுடன், வினா  எழுப்பியவர்கள் சிரித்து விட்டார்கள். “இவ்வளவு கதை எப்படித் தெரியும்..?” “எங்க சார் சொன்னாரு... அவரோட பேரை யும் சொன்னாரு... நான்தான் மறந்துட்டேன்..” “அவரோட பேரு ஜகஜீவன்ராம்..” என்று சொன்னதோடு, நல்ல மதிப்பெண்களையும் வழங்கினார்கள்.

மண்டேலா இனவெறியரா?!

போட்டித் தேர்வுக்கு படிப்பதற்கான உத்தி கள் சில சமயங்களில் சிக்கல்களையும் ஏற்  படுத்தி விடுகின்றன. அப்படிப்பட்ட உத்தி களைக் கையாண்டவர் ஒருவர் நேர்முகத் தேர்வில் பெரும் அதிர்ச்சியைத் தந்தார். “நெல்சன் மண்டேலாவைத் தெரியுமா?” “தெரியும்.. தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த வர்..” “எதற்காக அவர் சிறப்பு பெற்றார்?” “நாட்டு மக்கள் விடுதலைக்காகப் போராடி னார். 27 ஆண்டுகள் சிறையில் இருந்தார்.  இனவெறிக் கொள்கையைக் கடைப்பிடித்தார்.” கடைசி வரியைக் கேட்டவுடன் ஒட்டுமொத்த  நேர்முகத் தேர்வு உறுப்பினர்கள் அனைவ ருமே அதிர்ந்தனர். அதில் ஒருவர், “இனவெறிக் கொள்கை யையா கடைப்பிடித்தார்?” என்று கேட்கவும் செய்தார். நடந்தது இதுதான். பல பயிற்சி மையங்களில் எப்படிப் படிக்க லாம் என்று பல உத்திகளைக் கற்றுத் தரு கிறார்கள். கொள்குறிவகை வினாக்களில் (Multiple Choice Questions) இருந்து விரிவான  விடைகளை(Descriptive Answers) எழுதலாம்  என்ற உத்தி அண்மையில் அதிகரித்து வரு கிறது. சிறிது காலத்திற்கு முன்பாக விரிவான  விடையில் இருந்து நான்கைந்து கொள்குறி வகை வினாக்களைக் கற்றுக் கொள்ள முடியும்  என்றனர். தற்போது மாறியிருக்கிறது. ஒரு மையத்தில் ஆசிரியர் வகுப்பு நடத்திக்  கொண்டிருக்கும்போது நெல்சன் மண்டேலா வைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போது “அவர் இனவெறிக் கொள்கையைக் கடைப்பிடித்தார்” என்கிறார். ஒரு தேர்வர் உட னடியாகக் குறுக்கிட்டார். “சார்... அவரு இன வெறிக்கு எதிராகப் போராடுனார்..” என்றார். “அதைத்தான் நானும் சொல்கிறேன். Go by the book. அதில் அப்படித்தான் உள்ளது” என்றார்  ஆசிரியர்.  “இருங்க...” என்று சொல்லிவிட்டு எட்டாம் வகுப்புப் புத்தகத்தையும் எடுத்து, ‘255ஆவது பக்கம்’ என்று சொல்லிக் கொண்டே புரட்டி னார். பாடத்தைத் தொடவில்லை. நேராக பாடத்திற்குப் பின்னால் உள்ள வினாக்களுக்கு சென்றார். அதில் பொருத்துக என்றிருந்த வினா வை எழுதிக்காட்டினார்.

பொருத்துக      

1.  நெல்சன் மண்டேலா    (அ) 8 உறுப்பினர்கள்     
2. தேசியப் போர்     (ஆ) பீல்டு மார்ஷல் 
    நினைவுச்சின்னம்         
3. மானக் ஷா    (இ) எரிசக்தி மேம்பாடு     
4. சார்க்    (ஈ) இனவெறிக் கொள்கை     
5. பி.சி.ஐ.எம்    (உ) புது டெல்லி
 

“இதில் மண்டேலாவுக்குப் பொருத்தமானது இனவெறிக் கொள்கைதானே.” என்று சொன்  னார். “நீங்க படிக்குற மாதிரி படிச்சா, ஆமை  வேகம்தான். இப்பல்லாம் முயல் வேகம் தேவைப்படுது.. மார்க் முக்கியம், தேர்வரே” என்றும் குறிப்பிட்டார். பாடத்திற்குள் தெளிவாக,  இன்வெறிக் கொள்கைக்கு எதிராகப் போராடி னார் என்று உள்ளது. ஆனால், அதை ஒருமுறை தான் படிக்கிறார்கள். வினாக்களை மீண்டும்,  மீண்டும் எந்திரத்தனமாகப் படிக்க வைக்கி றார்கள். மேலேயுள்ள வினாவில், இவர்க ளுக்காகவாவது இனவெறிக் கொள்கை எதிர்ப்பு  என்று பள்ளிக்கல்வித்துறை மாற்றினால் நல்லது.  அந்த வகுப்பில் இருந்தவர்களில் ஒரு வர்தான் நேர்முகத்தேர்வில் தனது விடையில் பிடிவாதமாக இருந்தார். ஆனால், வகுப்பில் வினா எழுப்பிய “ஆமை”, தேர்வில் வெற்றி பெற்று பணியில் ஏற்கனவே அமர்ந்திருந்தார்.