tamilnadu

img

பாஜகவுடன் கூட்டணி சுமூகமாக உள்ளதாம்!

சென்னை, செப். 17- அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான காவிரி விவகாரம் தொடர்பான குழு வில் அதிமுக பங்கேற்கும் என அதிமுக நாடாளுமன்ற குழு தலைவர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். “அதிமுக பொதுச்செய லாளர் எடப்பாடி பழனிச் சாமி 2 தினங்களுக்கு முன்  தில்லி வந்து அமித்ஷாவை  சந்தித்தார். பா.ஜ.க.வுட னான கூட்டணி, ‘சுமுகமாக’  செல்கிறது. காவேரி விவகா ரம் குறித்து அமைச்சர் துரை முருகன் தில்லி வர உள் ளார். அவரது தலைமை யிலான குழுவில் அதிமுக சார்பில் நானும் சந்திரசேக ரும் கலந்து கொள்கிறோம். நாடாளுமன்ற கூட்டத் தொடர் முக்கியமான நிகழ்வாக இருக்கும். ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மூலம் நாடாளுமன்றத்திற்கும் தமி ழக சட்டமன்றத்திற்கும் ஒரே  நேரத்தில் தேர்தல் நடக்கும் என எதிர்பார்ப்பு உள்ளது” எனக் கூறினார். தமிழகத்தில் கூட்டணி கள் திராவிட இயக்கங்கள் தலைமையில் தான் இருக் கும். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தான் தேர்தலை சந்திப்போம். எடப் ப்பாடி பழனிசாமியை முத லமைச்சராக்க பாடுபடு வோம். எங்கள் இடையே கருத்து வேறுபாடு எதுவும் இல்லை. தேர்தலில் சுமூக மாக செயல்பட்டு வெற்றி பெற பாடுபடுவோம் என்றார்.