tamilnadu

அதிமுகவினரின் கண்ணீர் நாடகம் மக்களை ஏமாற்ற முடியாது!

அதிமுகவினரின் கண்ணீர் நாடகம் மக்களை ஏமாற்ற முடியாது!

சென்னை வந்து அமித்ஷா, எடப்பாடி முன்னிலையில், “அதி முக – பாஜக கூட்டணி” என்று  அறிவித்த பிறகு கடந்த சில நாட்களாக ஆங்காங்கே அதிமு கவினர் அந்த கூட்டணி ஏற்படுத் துவதற்கான நியாயத்தைச் சொல்ல முடியாமல், ஆளா ளுக்கு ஏதேதோ சொல்லி வரு கின்றனர். அதன் ஒரு பகுதியாக மிகவும் உருக்கமான சோக கீதத்தை வாசித்து, கண்ணீர் சிந்தி நாடகத்தையும் அரங்கேற்றி வருகின்றனர். “ஐயோ பரிதாபம், அதிமுக இப்படி சிக்கி விட்டதே!” என்று  மக்கள் மனம் உருகி அதிமுக மீது இறக்கப்பட்டு ஆதரவு தெரி விப்பார்கள் என்ற நப்பாசையில் அந்த சோக நாடகம் அரங்கேற் றப்பட்டு வருகிறது. திருப்பூரில் அதிமுக பூத் கமிட்டி கூட்டத்தில் பேசிய முன் னாள் தெற்கு எம்எல்ஏ எஸ்.குண சேகரன், அதிமுக பாஜக கூட் டணி அமைந்தது வருத்தம்  அளிக்கிறது என தெரிவித்துள் ளார். அதிமுக மாமன்ற உறுப் பினர் கண்ணப்பன், கட்சியைக் காப்பாற்ற வேண்டிய நிர்ப்பந்தத்தில்தான் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இருப்பி னும் அதிமுக இஸ்லாமியர்களை எப்போதும் கைவிடாது. எடப் பாடி பழனிச்சாமி இஸ்லாமி யர்களுக்காக செய்த திட்டங்கள் மற்றும் இஸ்லாமியர்களை கைவிட மாட்டோம் என்ற அறிக் கையை மாவட்டச் செயலாளர் பெற்றுத் தர வேண்டும் என சொல்லி கண் கலங்கியுள்ளார். இந்த காட்சிகள் செய்தித் தொலைகாட்சிகளில் ஒளிபரப்பப் பட்டு பரபரப்பை ஏற்படுத்தின. கட்சியைக் காப்பாற்ற வேண் டிய நிர்பந்தம் ஏன்? எதற்காக?  முந்தைய அதிமுக ஆட்சியின் போது, எடப்பாடி பழனிசாமி தொடங்கி அக்கட்சியின் முக்கிய  தலைவர்கள் பலரும் ஊழல்,  முறைகேடுகளை அரங்கேற்றியுள் ளனர். அதை வைத்துத்தான் அமலாக்கத்துறை, வருமானவரித் துறை ரெய்டு என ஒன்றிய பாஜக அரசு அவர்களை மிரட்டி வருகிறது. பாஜகவுக்கு ஊழலை ஒழிப்பது நோக்கமல்ல, தங்கள் சுயலாபத்திற்காக அரசியல் கூட் டணி உருவாக்குவதுதான் நோக் கம். அதற்கு அதிமுகவினர் செய்த ஊழல்கள் பாஜக மிரட்ட லுக்கு காரணமாக உள்ளன. அக்கட்சியின் தலைவர் ஜெயலலிதா பாஜகவுடன் கூட்டணி சேர்ந்த தப்பை அதி முக இனிமேல் செய்யாது என்று பகிரங்கமாக உறுதியளித்தார். ஆனால் அவர் மறைவுக்குப் பின்னர், அதை மீறி அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டது. அது மட்டுமின்றி, 2021ஆம் ஆண்டு வரை ஆட்சி யில் இருந்த எடப்பாடி பழனிசாமி அரசு ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்த ஒவ்வொரு மக்கள் விரோத சட்டங்களையும் நாடா ளுமன்றத்தில் ஆதரித்தது. குடியு ரிமை திருத்தச் சட்டம், மூன்று வேளாண் சட்டங்கள், நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்பு, காஷ்மீருக்கு 370 சிறப்பு சட் டத்தை ரத்து செய்தது என  தனது சர்வாதிகார நடவடிக்கை களை சட்டமாகத் திணித்தபோது அதற்கெல்லாம் ஆதரவு கொடுத்தது அதிமுகதான். இப்போது வந்து கட்சியைக் காப்பாற்ற கூட்டணி என்று சொல்லி அதிமுகவினர் யாரை ஏமாற்றப் பார்க்கிறார்கள்? இஸ் லாமியர்களைக் கைவிட மாட் டோம் என உறுதியளிப்பார்க ளாம்! பாஜக இஸ்லாமியர்க ளுக்கு எதிரான கட்சி மட்டு மல்ல, அனைத்து மதங்களையும்  சேர்ந்த ஏழை உழைப்பாளி மக்க ளுக்கு எதிரான கட்சி. அதிமுக என்ன காரணம் சொன்னாலும், அது இஸ்லாமியர்களுக்கு மட்டு மல்ல, ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் துரோகம் செய்துள் ளது என்பதுதான் உண்மை. எனவே இவர்களது கண்ணீர் நாடகம், சோக கீதம் எதுவும் எடுபடாது. பாசிச போக்கில் செல்லும் நாசகர பாஜகவுக்கு தமிழகத்தில் நடைபாதை விரிக்கும் அதிமுகவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்!  (ந.நி)