திருநெல் வேலி, மார்ச் 1 - கூடங்குளம் அணுமின் நிலை யத்தில், ‘சி’ பிரிவு பணியாளர்களுக் கான தேர்வு, மார்ச் 3 அன்று நடக்க உள்ள நிலையில், அதனை ரத்து செய்ய வேண்டுமென சட்டப்பேரவைத் தலைவர் எம். அப்பாவு, இந்திய அணுசக்தி கழகச் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், “அணு உலைக்கு இடம் கொடுத்தவர்களும், உள்ளூர் மக்க ளும் மட்டுமே ‘சி’ பிரிவில் பணியமர்த்தப் பட வேண்டும்’ என 1999-ஆம் ஆண்டு அணு சக்திக் கழகம் - திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள் ளது. இப்போது, அப்பணிகளுக்கு தேர்வு நடத்தப்படுவது ஒப்பந்தத்தை மீறும் செயல்” என கடிதத்தில் அப்பாவு குறிப் பிட்டுள்ளார்.