சென்னை, மார்ச் 21 - சாதி ஒழிப்பின் முதல்படியே தீண்டாமை ஒழிப்பு என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார். சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க சிறப்புச் சட்டம் இயற்ற வலியுறுத்தி திங்களன்று (மார்ச் 21) சென்னையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் சிறப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கே.பாலகிருஷ்ணன் பேசியதன் சுருக்கம் வருமாறு: சாதி மறுப்பு, காதல் திருமணம் நடைபெற்றால் ஆணவக் கொலைதான் நடக்கும் என்று விதி எழுத முயற்சிக்கிறார்கள். அந்த அநீதிக்கு, வன்முறையை புறந்தள்ளி நீதி பெற்றுத்தர களத்தில் நிற்கிறோம். சாதி மறுப்பு, காதல் திருமணம் செய்வோ ருக்கு அரசு, காவல்துறை பாதுகாப்பு தரவில்லை யென்றால், மார்க்சிஸ்ட் கட்சி வழங்கும். பலி கொடுத்துவிட்டு வழக்கு நடத்துவதற்கு மாறாக, பாதுகாப்பு அரணாக இருப்போம். ஆணவக் கொலைகள், வன்கொடுமை போன்ற வழக்குகளில் 20 வருடங்கள் போராடினால்தான் நீதி கிடைக்கிறது. ஒவ்வொரு வழக்கிலும் அழுத்தம், மிரட்டல் போன்றவற்றை கடந்துதான் நீதி நிலைநாட்டப்படுகிறது. ஆணவப் படுகொலைக்கு எதிராக சிறப்புச் சட்டம் கேட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகிறோம். சட்டம் நிறைவேற்றினால் மட்டும் கொடுமைகள் முடிவுக்கு வந்துவிடாது. வழக்கை விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர சிறப்புச் சட்டம் பயன்படும். இந்த சட்டத்தை நடப்புக் கூட்டத்தொடரில் நிறைவேற்ற மாநில அரசு முன்வரவேண்டும்.
தமிழகத்தில் நடைபெறும் ஆணவக் கொலை களுக்கு எதிராக போராடுகிறோம்; நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தண்டனை பெற்றுத் தருகிறோம். அவற்றை தொகுத்து ஆவணமாக்க வேண்டும். கம்மாபுரம் வழக்கு ‘ஜெய்பீம்’ திரைப்படமாக வந்தபோது சமூகத்தின் மனசாட்சியை தட்டி எழுப்பி யது. அதேபோன்று ஆணவக்கொலை வழக்குகள் குறித்த ஆவணம் எதிர்கால சமூகத்தை உலுக்கும். சாதியத்தின் ஆணிவேரை அறுக்க, சுரண்ட லையும் எதிர்த்து போராட்டத்தையும் இணைத்து நடத்த வேண்டும். தனியுடமை மீது சாதியம் கட்ட மைக்கப்பட்டுள்ளது. வர்ணாசிரமம் உழைப்பாளி களுக்கு சொத்துரிமை இல்லை என்கிறது. எனவேதான் இடதுசாரிகள் சாதி ஒழிப்பையும், சுரண்டலையும் எதிர்த்து ஒருசேர போராடுகிறோம். சாதி ஒழிப்பின் முதற்கட்டமாக தீண்டாமையை எதிர்த்துப் போராடுகிறோம். இந்தப் பிரச்சனையில் தமிழகத்தில் உள்ள சமூக அமைப்புகள் அனைவரும் இணைந்து போராடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
சட்டமன்றத்தில் மீண்டும் மசோதா
சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் பேசுகையில், “சாதி ஆணவப் படுகொலையை தடுக்க சிறப்புச் சட்டம் கொண்டு வர வலியுறுத்தி 2015ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் தனி நபர் மசோதாவை கொண்டு வந்தேன். அதை பேரவை செயலகம் நிராகரித்தது. அதன்பிறகு நடைபெற்ற ஆணவக் கொலைகள், தீர்ப்புகளை உள்ளடக்கி மீண்டும் சிறப்பானதொரு மசோதாவை நிராகரிக்க முடியாத வகையில் மீண்டும் சட்டமன்றத்தில் கொண்டு வருவோம்.” என்றார். “தீண்டாமை ஒழிக்கப்பட்டுள்ளதாக சட்டத்தில் உள்ளது; நடைமுறையில் இருக்கிறது. மனநோயாளி களால் மாற முடியாது என்பதால், அவர்களை அச்சுறுத்தவும், ஏழை எளிய மக்களை பாதுகாக்க வும் சட்டம் தேவைப்படுகிறது” என்று குறிப்பிட்ட அவர், “தலித் மக்களுக்காக, தலித் அல்லாத பெரும் பான்மை மக்களையும் போராட வைத்துள்ளது தீண்டாமை ஒழிப்பு முன்னணி. சாகப் போகும் தத்து வத்திற்கு உயிரை விடுவதைவிட, வாழப்போகும் தத்துவத்திற்கு உயிரை விடுவது மேல் என்கிறது லத்தின் அமெரிக்க கவிதை. மார்க்சியம், அம்பேத்க ரியம், பெரியாரியம் எதிர்காலத்திலும் வாழும். அதற்கு உயிரை கொடுப்பதில் தவறில்லை” என்றார்.
கலாச்சாரப்பற்று உதிர வேண்டும்
“சிறப்புச் சட்டம் கொண்டு வந்தால் குற்ற வாளிகளுக்கு அச்சம் வரும்; ஒடுக்கப்படும் மக்களுக்கு நம்பிக்கை வரும். சட்டம் போட்டு சாதியை ஒழிக்க முடியாது. ஆழ்மனதில் உள்ள சாதி கலாச்சாரப்பற்று உதிர வேண்டும். அத்தகைய தொரு சமுதாயம் அமையும்” என்று குறிப்பிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன், “சமத்துவத்திற்கான போராட்டத்தில் செங்கொடி ஏந்திய வீரர்களாக அணிவகுப்போம்” என்றார்.
எது திராவிட மாடல்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு பேசுகையில், “சாதி ஆணவப் படுகொலையை தடுக்க சிறப்புச் சட்டம் கொண்டு வர மார்க்சிஸ்ட் கட்சியோடு இணைந்து விசிக-வும் குரல் கொடுக்கும். சாதி ஆணவப் படு கொலையை தடுக்க சிறப்புச் சட்டம் கொண்டு வரு வதுதான் திராவிட மாடலாக இருக்க முடியும்” என்றார்.
50 ஆணவக்கொலைகள்
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் பி.சுகந்தி குறிப்பிடுகையில், “ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப்போல் சாதி ஆதிக்க மும், ஆணாதிக்கமும், சாதி ஆணவப் படுகொலை களுக்கு காரணமாக உள்ளன. தமிழகத்தில் ஆண்டுக்கு 50 சாதி ஆணவப் படுகொலைகள் நடைபெறுகின்றன” என்றார்.