உலகம் வேலையின்மையால் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. பல நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றன என்று சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) தெரிவித்துள்ளது. 2021-ஆம் ஆண்டின் கடைசிக் காலாண்டில் வேலை வாய்ப்பில் ஒரு சிறிய வளர்ச்சி ஏற்பட்டிருந்த நிலையில் 2022-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் உலகளவில் பணிபுரிந்த தொழிலாளர்களின் மொத்த பணி நேரம் அதா வது தொற்றுநோய்க்கு முந்தைய காலத்தோடு ஒப்பிட்டால் 3.8 சதவீதம் குறைவு. 2022-ஆம் ஆண்டு காலகட்டத்தில் சுமார் 11.2 கோடிப் பேர் இருந்த வேலையையும் இழந்திருக்கலாம்.
வீழ்ச்சியடைந்த பெண்களின் வேலை வாய்ப்பு
இந்தியாவில் வேலைவாய்ப்பு “பாலினத்தை யும் உள்ளடக்கியதாக உள்ளது. 2020- ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இந்தியா மற்றும் இந்தியாவைத் தவிர குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் வேலை வாய்ப்பில் “பாலின இடைவெளியில்” பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இந்தியாவில் பெண்கள் வேலைக்குச் செல்வது குறைவாகவே உள்ளது. இது கொரோனா காலத்தில் கடுமையாக அதி கரித்தது. ஆண்களின் வேலை நேரத்தைக் குறைத்ததும் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்கிறது அறிக்கை. இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டத் திற்கு தீர்வுகாண ஒன்றிய அரசு முன்வர வேண்டும். குறிப்பாக பெண்களின் வேலை வாய்ப்பு பறிபோய் உள்ளது கவலையளிப்பதாய் உள்ளது. சர்வதேச தொழிலாளர் அமைப்பு நிரந்தர வேலை, நிரந்தர ஊதியம் வழங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்துகிறது. ஆனால், இந்தியாவில் தகுதியான வேலை வாய்ப்பு இல்லை. பெரும்பாலான மக்கள் எந்த சமூகப் பாதுகாப்பும் இல்லாமல் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே உள்ளனர். நியாயமான ஊதியமும் வழங்குவதில்லை. இதனால் வாங்கும் சக்தியும் குறைந்து வருகிறது. தொழிலாளர்கள் அவர்களின் குடும்பங்கள் வாழ்வதற்கு ஏற்ப நியாயமான ஊதியம் வழங்க வேண்டும் என ஊதியக் குழு 1948-ஆம் ஆண்டே பரிந்துரைத்தது. ஆனால் பெரும் முதலாளிகள், கார்ப்பரேட்டுகள் ஆத ரவுக் கொள்கைகளால் தொழிலாளர்கள் கண்ணி யமான வாழ்க்கை வாழ முடியாமல், உரிய ஊதி யம் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். 2019-ஆம் ஆண்டு தொழிலாளர்களின் ஊதி யம் குறித்த சட்டத்தை ஒன்றிய அரசு நிறை வேற்றியது. ஆனால் இன்னும் அது நடை முறைப்படுத்தப்படவில்லை.
சிறு-குறு தொழில்நிறுவனங்கள் நிலை
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் கணிப்பில் இந்தியாவின் உண்மை நிலை குறைத்தே மதிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் 30 சதவீதம் முதல் 60 சதவீதம் தொழி லாளர்கள் வேலையிழந்துள்ளனர். சுமார் ஐந்து கோடிப் பேர் எந்த வேலையிலும் சேரவில்லை. கொரோனா சிறு-குறு தொழில் நிறுவனங் கள் மூடப்பட்டன. அவை மீண்டும் திறக்கப் படவில்லை. அப்படியே திறக்கப்பட்டிருந்தாலும் முன்பிருந்த தொழிலாளர் எண்ணிக்கை இப் போது இல்லை. பழைய நிலைக்கு சிறு-குறு தொழில்நிறுவனங்கள் திரும்புமா என்பதும் சந்தேகம்தான். கொரோனா தாக்கத்திற்கு பின் கிட்டத்தட்ட 50 சதவீத பெண்கள் நகரங்களை நோக்கி வந்துள்ளனர். ஒட்டுமொத்தத்தில் வேலை வாய்ப்பில் பெண்களின் பங்களிப்பு குறைந்துள் ளது. இருக்கிற தொழில்களை தக்கவைக்க வேண்டும். தொழில் நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்வதை நிறுத்த வேண்டும். ஆட்குறைப்பு செய்வதை ஒன்றிய அரசு கண்காணிக்க வேண்டும். சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தரவு களை மேற்கோள் காட்டி பேசிய தொழிலாளர் அமைப்பின் அதிகாரியொருவர், தற்போது சீனாவில் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய லாக்ட வுன், உக்ரைன்- ரஷ்யா போர் மற்றும் உணவு, எரிபொருளின் விலைகளில் உலகளாவிய உயர்வு ஆகியவை வேலைவாய்ப்பு பறி போனதற்கு முக்கியக் காரணங்களாகும் என்று கூறுகிறார்.
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் கணிப்பில் இந்தியாவின் உண்மை நிலை குறைத்தே மதிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் 30 சதவீதம் முதல் 60 சதவீதம் தொழி லாளர்கள் வேலையிழந்துள்ளனர். சுமார் ஐந்து கோடிப் பேர் எந்த வேலையிலும் சேரவில்லை. கொரோனா சிறு-குறு தொழில் நிறுவனங் கள் மூடப்பட்டன. அவை மீண்டும் திறக்கப் படவில்லை. அப்படியே திறக்கப்பட்டிருந்தாலும் முன்பிருந்த தொழிலாளர் எண்ணிக்கை இப் போது இல்லை. பழைய நிலைக்கு சிறு-குறு தொழில்நிறுவனங்கள் திரும்புமா என்பதும் சந்தேகம்தான். கொரோனா தாக்கத்திற்கு பின் கிட்டத்தட்ட 50 சதவீத பெண்கள் நகரங்களை நோக்கி வந்துள்ளனர். ஒட்டுமொத்தத்தில் வேலை வாய்ப்பில் பெண்களின் பங்களிப்பு குறைந்துள் ளது. இருக்கிற தொழில்களை தக்கவைக்க வேண்டும். தொழில் நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்வதை நிறுத்த வேண்டும். ஆட்குறைப்பு செய்வதை ஒன்றிய அரசு கண்காணிக்க வேண்டும். சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தரவு களை மேற்கோள் காட்டி பேசிய தொழிலாளர் அமைப்பின் அதிகாரியொருவர், தற்போது சீனாவில் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய லாக்ட வுன், உக்ரைன்- ரஷ்யா போர் மற்றும் உணவு, எரிபொருளின் விலைகளில் உலகளாவிய உயர்வு ஆகியவை வேலைவாய்ப்பு பறி போனதற்கு முக்கியக் காரணங்களாகும் என்று கூறுகிறார்.