பெண் சாவில் சந்தேகம் காவல்துறை விசாரணை
தஞ்சாவூர், ஜூன் 2-தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகேஉள்ள ஆண்டிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் அன்புதாசன்(30) விவசாயி. இவருக்கும் வேதாரண்யம் வ.உ.சி நகர் பகுதியைச் சேர்ந்த கல்யாணசுந்தரம்- கல்யாணசுந்தரி தம்பதி மகள் கார்த்திகாவுக்கும்(25) கடந்த 5 ஆண்டுக்குமுன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு தேவதர்ஷினி என்ற மூன்றரை வயது பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் அன்புதாசனுக்கும், கார்த்திகாவுக்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் கார்த்திகா சனிக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுதற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில்கார்த்திகா உயிரிழந்தார். இறந்து போன கார்த்திகாவின் தாயார் கல்யாணசுந்தரி, தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அளித்த புகாரின் பேரில் சேதுபாவாசத்திரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேதமாகி 3 ஆண்டாகியும் சீரமைக்கப்படாத ரயில் பாலம்
நாகப்பட்டினம், ஜூன் 2-நாகப்பட்டினத்திற்கு, மேற்கே, தஞ்சாவூர்- வேதாரணியம் செல்லும் சாலையில் உள்ளது புத்தூர். 7 ஆண்டுகளுக்கு முன்பு காரைக்காலிலிலிருந்து திருத்துறைப் பூண்டி செல்லும் கிழக்குக் கடற்கரைச் சாலை அமைக்கும்போது புத்தூர் ரயில்வே மேம்பாலம் ரூ.15 கோடி மதிப்பில்கட்டப்பட்டது. இந்த மேம்பாலம் கட்டப்படுவதற்கு முன்புவேளாங்கண்ணி, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் போது ரயில்வே கேட் மூடப்பட்டு நீண்ட நேரம்வாகனங்கள் காத்துக் கிடக்க வேண்டும்.கிழக்குக் கடற்கரைச் சாலை அமைந்து ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு 5 ஆண்டுக்கு முன்பு பயன்பாட்டிற்குத் திறந்து விடப்பட்டது. ஆனால் ஓராண்டுக்குள்ளாகவே மிகப்பெரிய வெடிப்புகள் ஏற்பட்டு ஏறக்குறைய பாலமே இடிந்து விட்டது. அதன்பின் இந்த வழியாக வாகனங்கள் செல்லக்கூடாது என்று அறிவிப்புப் பலகை வைத்துவிட்டு பெரிய தடுப்புகள் அமைத்து விட்டார்கள். உடைந்தமேம்பாலத்தை ஆய்வு செய்த ரயில்வே அதிகாரிகளும், மாவட்ட ஆட்சியரும் 3 மாதத்திற்குள் உடைந்த பாலத்தைச்சரி செய்து விடுவோம் என்று கூறினார்கள். உடைந்த பாலம்இன்னும் சரி செய்யப்படாமலேயே சிதைந்து தான் கிடக்கிறது. பழையபடி, ரயில்வே கேட் முன்பு வரிசையாக வாகனங்கள் காத்துக் கொண்டு கிடக்கின்றன.
தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் சிறையிலடைப்பு
விருதுநகர், ஜூன் 2-அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திப்பட்டியை சேர்ந்த காளிமுத்து என்பவர் தனது மனைவியுடன் கடந்தமே13 இல் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது, திருச்சுழி,அம்மன்பட்டியை சேர்ந்த விக்னேஷ்வரன் (எ) அஜீத் (20) என்பவர் 2 பேருடன் தம்பதிகளை தாக்கி, பணம் மற்றும்இரு சக்கர வாகனத்தை பறித்து சென்றனர். இதுகுறித்து அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விக்னேஷ்வரன் (எ) அஜீத் கைது செய்யப்பட்டார். மேலும் இவர் மீது, திருச்சுழிமற்றும் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜராஜன், விக்னேஷ்வரன் (எ) அஜீத் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து, ஆட்சியரின் உத்தரவின் பேரில் அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
மற்றொருவர்
நெல்லை மாவட்டம், சீவலப்பேரியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் தனது நண்பருடன் கடந்த மே., 14 இல் இரு சக்கர வாகனத்தில் திருச்சுழி பூமிநாதர்கோவிலுக்கு வந்துவிட்டு, திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, இராமநாதபுரம் மாவட்டம், மரைக்குளத்தை சேர்ந்த மணிவண்ணன் (23) என்பவர் தனது கூட்டாளிகளுடன் வாகனத்தை வழி மறித்து பணம் மற்றும் செல்போனைபறித்துள்ளனர். இதுகுறித்து திருச்சுழி காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டு மணிவண்ணன் கைது செய்யப்பட்டார்.