தாமல் ஏரி நிரம்பியது! விவசாயிகள் மகிழ்ச்சி
காஞ்சிபுரம், அக்.12 - ஏரிகள் நிறைந்த காஞ்சிபுரம் மாவட் டத்தின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான தாமல் ஏரி சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருகே அமைந்துள்ளது. ஆந்திரா மற்றும் ராணிப் பேட்டை மாவட்டங்களில் பெய்த கன மழையால் பொன்னை அணைக்கட்டில் இருந்து கம்பன் கால்வாய் மற்றும் கோவிந்த வாடி கால்வாய் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் தாமல் ஏரி தனது முழு கொள்ள ளவான 18 அடியை நிரம்பி உபரி நீர் கலங்கல்கள் வழியாக வெளியேறி வரு கிறது. ஏரி முழுவதுமாக நிரம்பியதால் சுமார் 2000 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் என விவசாயிகள் தெரிவித்தனர். மதகுகள் வழியாக வெளியேறும் தண்ணீரில் சிறு வர்கள் உற்சாக குளியல் போட்டு வரு கின்றனர். பருவமழை தொடங்குவதற்கு முன்பே ஏரி நிரம்பியதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து கால்வாய் மூலம் வரும் தண்ணீர் பிற ஏரிகளுக்கு திருப்பி விடப்படும் என பொதுப்பணித்துறை அதி காரிகள் தெரிவித்துள்ளனர். ஒரு வருடத்திற்கு பிறகு ஏரியிலிருந்து தண்ணீர் ஆர்ப்பரித்து வெளியேறுவ தாலும் ஆர்வத்துடன் பொதுமக்கள் ஞாயிறன்று அங்கு சென்று கண்டு களித்து வருகின்றனர். இதனால் தாமல் ஏரி பொதுமக்களின் குட்டி சுற்றுலா தளமாக மாறி வருகிறது.
