tamilnadu

படைகளைக் குவிக்கிறது அமெரிக்கா உக்ரைன் எல்லையில் பதற்றம்

கீவ், ஜன.25- ரஷ்யா உக்ரைன் மீது படை யெடுக்கப் போவதாகப் பொய்ப் பிரச்சாரம் செய்து வரும் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் படைகளைக் குவித்து வருகின்றன. இது குறித்துக் கருத்து தெரிவித்த ரஷ்யாவின் ஜனாதிபதி மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், “உக்ரைனைக் கார ணம் காட்டி ராணுவ நடவடிக்கை களை அமெரிக்க ராணுவக்கூட்டணி யான நேட்டோ அதிகப்படுத்தி யுள்ளது. இந்த நடவடிக்கைகளை ரஷ்யா அலட்சியப்படுத்த முடியாது. கிழக்கு ஐரோப்பியப் பகுதிகளுக்குக் கூடுதல் போர்க்கப்பல்களையும் நேட்டோ அனுப்பி வருகிறது. ஏராளமான போர் விமானங்களும் அனுப்பப்பட்டுள்ளன” என்றார். உக்ரைனும் தனது மேற்கத்திய கூட்டாளிகளின் துணையோடு, குடி யரசுகளாக தங்களை அறிவித்துக் கொண்ட இரண்டு பகுதிகளில் படைகள் அதிகப்படுத்தியுள்ளது. இது டோன்பாஸ் பகுதியில் பெரும் பதற்றத்தை உருவாக்கியிருக்கிறது. எப்போதும் இல்லாத அளவுக்கு தேவையற்ற படைக்குவிப்பு, பதற்றத்தை அதிகப்படுத்தவே செய்யும் என்று பெஸ்கோவ் சுட்டிக் காட்டியிருக்கிறார்.  

தற்போது உக்ரைன் மீது ரஷ்யா  படையெடுக்கப் போவதாகச் சொல்லி, ஒட்டுமொத்த கிழக்கு ஐரோப்பிய நாடுகள் முழுவதும் பதற்றம் உருவாகியுள்ளது. தங்க ளுக்கு அத்தகைய நோக்கம் எதுவும் இல்லை என்று ரஷ்யா தெளிவு படுத்திய பிறகும், அமெரிக்கா தலை மையிலான கூட்டணி ராணுவத் தைக் குவித்து வருகிறது. அவர்க ளின் பிரச்சாரம் முழுக்க, முழுக்கப் பொய். தற்போதைய பதற்றமான சூழலை உருவாக்கியதே அமெ ரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் தான் என்று பெஸ்கோவ் கூறி யுள்ளார். கிழக்கு ஐரோப்பியப் பகுதிக ளுக்கு கூடுதல் படைகள் அனுப்பப் படுவதை அமெரிக்க ராணுவக் கூட்ட ணியான நேட்டோவும் மறுக்க வில்லை. எந்நேரமும் ரஷ்யா, உக்ரைறறனைத் தாக்கலாம் என்பதை மட்டும் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். பிரிட்டனில் ஆளும்கட்சி பெரும் நெருக்கடியை சந்தித்து வருவதால், அதிலிருந்து மீள ரஷ்யா மீது குற்றம் சாட்டி வரு கிறார்கள். உக்ரைன் மீது ஆயுதங்க ளை சுமத்துவதில் அமெரிக்காவும், பிரிட்டனும் மும்முரமாக இருக் கின்றன.