tamilnadu

img

‘மேக் இன் இந்தியா’, வேலைவாய்ப்பு, இரட்டிப்பு வருமான வாக்குறுதி பற்றியெல்லாம் மோடி எப்போது வாய் திறப்பார்?

ஹைதராபாத், ஜூலை 4- கறுப்புப் பண ஒழிப்பு, மேக்  இன் இந்தியா, வருவாய் 2 மடங்  காக அதிகரிப்பு என பிரதமர் நரேந் திர மோடி, நாட்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் பற்றி எப்போது வாய் திறப்பார்? என்று தெலுங்கானா முதல்வரும், தெலுங் கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சித் தலைவருமான சந்திரசேகர ராவ் கேள்வி எழுப்பியுள்ளார். ஹைதராபாத்தில் நடைபெற்ற பாஜக-வின் தேசிய செயற்குழு கூட்டத்தையொட்டி சந்திரசேகர ராவ் அரசை பாஜக தலைவர்கள் விமர்சித்த நிலையில், அதற்கு சந்திரசேகர ராவ் தற்போது கடு மையான பதிலடி கொடுத்துள்  ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “விவசாயிகள் நலனுக்காக கொண்டு வரப்பட்டதாக கூறிய  வேளாண் சட்டத்தை, மோடி அரசு திரும்பப் பெற்றது ஏன்?, விவசாயி கள் வருமானத்தை இரட்டிப்பு மடங்  காக உயர்த்துவேன் என வாக்கு றுதி அளித்திருந்த நிலையில், தற் போது விவசாய உற்பத்திக்கான முதலீடு இரு மடங்காக அதிக ரித்திருப்பது ஏன்? இந்தியாவிலே தயாரிக்கும் (மேக் இன் இந்தியா) திட்டத்தின் கீழ் எத்தனை வேலைவாய்ப்பு களை ஒன்றிய அரசு உருவாக்கி இருக்கிறது என்ற புள்ளி விவ ரங்களை பிரதமர் மோடி வெளி யிட வேண்டும். 

பிரஸ்தாச்சார் முக்த் பாரத் என்ன ஆனது; அமெரிக்க டால ருக்கு நிகரான ரூபாய் ஏன் வீழ்ச்சி யடைகிறது; ஏன் இந்த நாட்டில்  விவசாயிகள் அவமதிக்கப்படு கிறார்கள்; தேர்தல் வாக்குறுதி களை உங்கள் அரசாங்கம் ஏன் செயல்படுத்தத் தவறுகிறது? நீங்கள் குற்றமற்றவர் என்றால், இந்தக் கேள்விகளுக்கு எல்லாம்  பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டத்திலே பதில் சொல்லுங் கள்! பிரதமர் உறுதியளித்தபடி  கறுப்புப் பணம் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டதா? அது எங்கே இருக்கிறது? வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் வைத்தி ருக்கும் கறுப்புப் பணத்தின் அளவு  பிரதமர் மோடியின் பதவிக் காலத்  தில் 2 மடங்காக அதிகரித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி தேர் தல் அகமதாபாத் மாநகராட்சி தேர்  தல் போன்றது என்று மோடி நினைத்தார். தோற்கடிக்கப்பட்ட டிரம்ப்பை மோடி ஆதரித்தார், இது இறுதியில் நாட்டின் நற்பெயரைத் தான் கெடுத்தது. இலங்கையில் மோடி அரசு மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு, உலகம் முழுவதும் நாட்டின் நற்  பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரத்தைப் போல்  தெலுங்கானாவிலும் ஆட்சி மாற் றம் நடக்கும் என ஹைதராபாத்தில் அமர்ந்திருக்கும் பாஜக-வினர் கூறு கின்றனர். 119 உறுப்பினர்களைக் கொண்ட தெலுங்கானா பேரவை யில் டிஆர்எஸ் கட்சிக்கு 100-க்கும்  மேற்பட்ட எம்எல்ஏக்கள் பலம் உள்  ளது. பரவாயில்லை. எங்கள் அரசை கவிழச் செய்யுங்கள். அதன் பிறகு நான் சுதந்திரமாகி விடுவேன். பின்னர் தில்லியில் (மோடி) ஆட்சியை கவிழ்க்க எங்க ளால் முடியும். நாங்களும் அதற்  காக காத்திருக்கிறோம். முடிந்தால்  ஆட்சி மாற்றத்தை நடத்திக் காட் டுங்கள்.

ஒன்பது மாநிலங்களில் தேர்ந் தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை பாஜக கவிழ்த்துள்ளது. மோடி  ஒவ்வொரு நாளும் ஜனநாயகத் தையும், நாட்டின் கூட்டாட்சி அமைப்பையும் வெற்றிகரமாகக் கொன்று வருகிறார்.  மோடி தன்னை பிரம்மா என்றும்  நிரந்தரம் என்றும் நினைக்கிறார். மோடி இந்த நாட்டின் 15-ஆவது பிரதமர். ஜனநாயகத்தில் யாரும் நிரந்தரமானவர்கள் இல்லை. மாற்றம் மட்டுமே நிரந்தரமானது. நாட்டில் எத்தனையோ பிரதமர் கள் மாறியுள்ளனர். மோடியின் ஆட்சியில் இந்த நாட்டில் எத்தனை வணிகர்கள் பணக்காரர்களாக ஆனார்கள் என்  பது குறித்த முழுத் தகவல் என்னி டம் உள்ளது. உரிய நேரத்தில்  இந்தத் தகவலை வெளியிடுவேன். இவ்வாறு தெலுங்கானா முதல்  வர் கே.சந்திரசேகர் ராவ் காட்ட மாக பதிலடி கொடுத்துள்ளார்.