திருவண்ணாமலை, ஜூலை 6- திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம் தரடாப்பட்டு கிராம அரசு உயர்நிலைப்பள்ளியில் 2015 ஆம் ஆண்டு ரூ. 65 லட்சத்தில் புதி தாக வகுப்பறை கட்டப்பட்டது. இந்த கட்டடம் கட்டி முடிக்கப் பட்டு 7ஆண்டுகள் மட்டுமே நிறைவடைந்துள்ள நிலையில், புதனன்று (ஜூலை 6) வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டி ருந்த நேரத்தில், பள்ளியின் வகுப்பறை கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் தரடாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் புகேஷ், தருண் குமார், கொழுந்தம்பட்டு பகுதியைச் சேர்ந்த மாணவர் ஜனார்த்தனன் மற்றும் தண்டராம்பட்டு பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் தினகரன் ஆகியோர் காய மடைந்தனர்.அனைவரையும் அங்கி ருந்தவர்கள் மீட்டு, சிகிச்சைக் காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்பட்டதும் இப்பள்ளியின் வகுப்பறையில் இருந்த மாணவர்கள் அனை வரும் பாதுகாப்பாக வெளியேற்றப் பட்டனர்.