நிலத்தடி நீருக்கு வரி: அடிமடியிலேயே கைவைத்த ஒன்றிய அரசு
பி.டில்லிபாபு கண்டனம்
நாமக்கல், ஜூன் 28- விவசாயிகள் பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்க முடிவு செய்துள்ள ஒன்றிய அரசு, விவசாயி களின் அடிமடியிலேயே கைவைத் துள்ளது என சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் பி.டில்லிபாபு கண்ட னம் தெரிவித்துள்ளது. நாமக்கல் மாவட்டம், திருச் செங்கோடு, எலச்சிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக் கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நிறைவு பொதுக்கூட்டம் வெள்ளி யன்று மாலை நடைபெற்றது. கட்சி யின் மேற்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.ரமேஷ் தலைமை வகித்தார். கிழக்கு ஒன்றியச் செயலாளர் வி. தேவராஜன் வரவேற்றார். கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினரும், சட்டமன்ற முன்னாள் உறுப்பினரு மான பி.டில்லிபாபு பேசுகையில், நாமக்கல் மாவட்டம் உழைப்பாளி கள், கம்யூனிஸ்டுகள் நிறைந்த பகு தியாகும். நிலமில்லாத மக்களுக்கு நிலம், வீட்டுமனை, சுடுகாடு பிரச் சனை, நடைபாதை பிரச்சனை, மின் சாரம் உள்ளிட்ட மக்களின் அடிப் படை பிரச்சனைகளை வலியுறுத்தி இன்றைக்கும், பல கிராமங்களில் செங்கொடி இயக்கம் தான் போராடி உரிமைகளை பெற்று தருகிறது. பிர தமர் நரேந்திர மோடியின் ஆட்சி யில், 2014 - 2022 வரை இந்திய நாட்டில் விவசாயிகள் கடனை அடைக்க முடியாமல், ஒரு லட்சத்து 43 ஆயிரம் பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது நாடாளுமன்றத்தில் கூறப்பட்டுள்ள விபரம் மட்டுமே. ஆனால், உண் மையில் எண்ணிக்கை இன்னும் பல மடங்கு அதிகமாக இருக்கும். நாடு முழுவதும் இனிமேல் இலவசமாக மின்சாரம் கொடுப்பதில்லை என ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கூறுகிறார். மேலும், எவ்வளவு தண் ணீர் நீங்கள் பயன்படுத்துகிறீர்கள்? என பாசன கணக்கெடுக்கப்படும். அதன் பிறகு ஒரு ஏக்கருக்கு இத் தனை ஆயிரம் லிட்டர் தான் இல வசமாக வழங்கப்படும். அப்புறம் அதுக்கு மேல கணக்கு போட்டு காசு வசூல் செய்யப்படும், என கூறுகிறார்கள். ‘அங்க வச்சு, இங்க வச்சு, கடைசில அடிமடியிலேயே கையை வச்சுட்டான்’ என்பது தற் போது நடந்துள்ளது. கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு விவசாயினுடைய நிலத் துக்கு போராடி பெற்ற இலவச மின்சாரத்திற்கு இரண்டு பைசா விலை ஏற்றிவிட்டார்கள். இதை எ திர்த்து நடைபெற்ற போராட்டத்தில் 51 விவசாயிகள் சுட்டு படுகொலை செய்யப்பட்டனர். கடுமையான போராட்டங்களுக்குப் பிறகே உயர்த்திய மின்கட்டணத்தை தமி ழக அரசு திரும்பப்பெற்றது. ஒரு மாதத்திற்கு விவசாயம் செய்வ தற்கு ஒரு எளிய விவசாயிக்கு மாதம் 15 ஆயிரம் ரூபாய் தேவைப் படுகிறது என்றால், அந்த விவசாயி பயிரிட்டு, அதை அறுவடை செய்து விற்பனை செய்து, ஆள் கூலி, உரம் முதலீடு என அத்தனைக்கும் பிற கும் அவருக்கு என்ன அப்படி மிஞ் சப் போகிறது? இந்த லட்சணத்தில் விவசாயிகள் பயன்படுத்தும் தண் ணீருக்கு வரி என்றால், அந்த விவ சாயி என்னதான் செய்ய முடியும்? கடந்த அதிமுக ஆட்சிக்காலத் தில் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, ‘அம்மா குடிநீர்’ விற் பனை செய்யப்பட்டது. தமிழ்நாட்டி லேயே, ஏன் இந்தியாவிலேயே குடிக் கிற தண்ணீரை காசுக்கு விக்கிற ஒரே அரசு தமிழ்நாடு அரசு தான் என அப்போது சட்டமன்றத்தில் நான் பேசினேன். அதற்கு கோபப் பட்ட ஜெயலலிதா, ‘வரி போடக்கூ டாது என்று சொல்றிங்க. உங்க தொகுதிக்கு கட்டடம், சாலை, அணை கேக்குறீங்க, இதுக்கு எல் லாம் பணத்துக்கு எங்க போக சொல் லுங்க’ என கேட்டார். குடிக்கிற தண் ணீரை அரசாங்கம் பூமியிலிருந்து எடுத்து, அதை பாட்டிலில் நிரப்பி விற்கிறது என்பது அரசாங்கம் செய்ற வேலையா இது? மக்க ளுக்கு குடிக்க தண்ணீர் கொடுப் பது, வீடு கட்டி கொடுப்பது, இலவச மாக மின்சாரம், மருத்துவம், பள் ளிக்கூடம், கல்வி கொடுப்பது அர சாங்கத்துடைய கடமை என்கிற அரசியல் சாசன சட்டத்தை அப்ப டியே குழி தோண்டி புதைக்கி றார்கள், என்றார். முன்னதாக, இந்நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.தமிழ்மணி, சு. சுரேஷ், மாவட்டக்குழு உறுப்பினர் ப.கவிதா, மூத்த தலைவர் கே.எஸ்.வெங்கடாசலம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், மூத்த தோழர் பெரியசாமி நன்றி கூறினார்.