tamilnadu

நீதிமன்ற உத்தரவை பின்பற்றி மதுபான பார்களை மூட வேண்டும்

சென்னை, பிப். 27- நீதிமன்ற உத்தரவை பின் பற்றி மதுபான பார்களை அரசு மூட வேண்டும் என டாஸ்மாக் ஊழியர் சம்மேள னம் வலியுறுத்தியுள்ளது. டாஸ்மாக் ஊழியர் சம்மே ளனக் கூட்டம் மாநில துணை த்தலைவர் எஸ்.கிருஷ்ண மூர்த்தி தலைமையில் சென்னை தாம்பரத்தில் நடை பெற்றது. இதில் மாநில பொதுச்செயலாளர் கே.திரு ச்செல்வன், துணைப் பொதுச் செயலாளர்கள் கே.பி.ராமு, ஜான் அந்தோணி ராஜ், பொருளாளர் ஜி.சதீஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் இதுகுறித்து கே.திருச்செல்வன் செய்தி யாளர்களிடம் கூறுகையில், ஆளும் கட்சி தொழிற்சங் கத்தின் நிர்ப்பந்தத்தின் கார ணமாகவும், துறை அமைச்ச ரின் சிபாரிசின் பேரிலும் நூற்றுக்கணக்கான பணியிட மாறுதல் ஆணைகள் வழங் கப்பட்டுள்ளது. இதில் பெரு மளவில் முறைகேடு நடை பெற்றுள்ளது.

முதலமைச் சர் ஊழலற்ற அரசு நிர்வா கத்தை அளிப்பேன் என்ற வாக்குறுதிக்கு விரோதமாக அதிகாரிகளும், துறை அமை ச்சரின் அலுவலகமும் செயல்படுவதை வன்மை யாகக் கண்டிக்கிறோம். எனவே டாஸ்மாக் நிர்வாகம் அனைத்து ஊழியர்க ளுக்கும் பொருந்தக்கூடிய பொது பணியிட மாறுதல் கொள்கையை உருவாக்க வேண்டும் என்றார். கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கடை களின் முன்னால் அமைக்கப் பட்ட தடுப்பு, பந்தல் மற்றும் கிருமிநாசினி ஆகியவை களுக்கான செலவுத் தொகை யை வழங்காமல் ஊழியர் தலையில் திணிக்கப்ப டுகிறது. மேலும் தற்போது கடைகளை தூய்மைப் படுத்தி வர்ணம் அடிக்க வேண்டும் என உத்தரவிடப் பட்டுள்ளது. இதற்குண்டான செலவுத் தொகையும் வழங் கப்படவில்லை. ஊழியர்கள் தாங்கள் வாங்கும் ஊதியத் தை கடையின் மின்சார கட்டணம், சரக்கு இறக்கு கூலி என பல வகைகளில் செலவிடும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

எனவே நிர்வாகம் கடைக் கான பராமரிப்பு செலவு களை முழுமையாக வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். டாஸ்மாக் நிறுவனம் கடைகளில் உள்ள மதுபான சரக்குகளை அடமானம் வைத்து 1,361 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளதாக தனது ஆண்டறிக்கையில் தெரிவித்துள்ளது. டாஸ்மாக் நிறுவனத்திற்கு என்று சொந் தமான மது ஆலைகள் இல்லை. எனவே மூலப் பொருள், உற்பத்தி செலவு என எந்த செலவும் கிடை யாது. சில்லறை விற்பனை யில் நஷ்டம் ஏற்பட வாய்ப் பில்லை.

ஆனால் டாஸ்மாக் நிர்வாகம் கடன் மற்றும் நட்டக் கணக்கு காட்டுகிறது. இது ஏற்புடையதல்ல. இப்படி கடன்கார நிறுவனமாக டாஸ்மாக் நிறுவனத்தை அரசு ஏன் நடத்த வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. சட்டத்தில் பொது இடங்க ளில் மது அருந்த அனுமதி இல்லை என்ற நிலையிலும், டாஸ்மாக் நிர்வாகம் பார் உரிமம் வழங்கியுள்ளதை ஏற்க மறுத்துள்ள சென்னை உயர்நீதிமன்றம் 6 மாத காலத்திற்குள் பார்களை மூட வேண்டும் என்று உத்தர விட்டுள்ளது. எனவே அரசு இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யாமல் பார்களை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 10ஆம் தேதி மாவட்ட தலைநக ரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும், கோரி க்கைகள் நிறைவேற்றப் படவில்லை என்றால் இதர சங்கங்களையும் இணைத் த்தும், மாநிலம் முழுவதிலும் இருந்து ஊழியர்களை திரட்டியும்  சென்னையில் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் தெரி வித்தார்.