tamilnadu

img

பணி நிரந்தரம் கோரி 5 மண்டலங்களில் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்

சென்னை, ஜூன் 23 - பணி நிரந்தரம் கோரி வியாழ னன்று (ஜூன் 23) 5 மண்ட லங்களில் டாஸ்மாக் ஊழியர்கள் பெருந்திரள் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர். டாஸ்மாக் கடைகளில் 19  ஆண்டுகளாக தொகுப்பூதி யத்தில் பணியாற்றி வரும் தொழி லாளர்கள், காலமுறை ஊதியம் வழங்க வேண்டுமென்று கோரி  வருகின்றனர். அரசு அவ்வப் போது தொகுப்பூதியத்தில் மட்டும் சிறிது உயர்வு அளித்து  வருகிறது. இதனால் தொழிலா ளர்கள் அதிருப்தி அடைந்துள்ள னர். இந்நிலையில் டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு  நடவடிக்கை குழு சார்பில் 5  மண்டலங்களில் உள்ள முது நிலை மண்டல அலுவலகம் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக சென்னை அண்ணா சாலையில் உள்ள மண்டல அலு வலகம் முன்பும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. டாஸ்மாக் ஊழியர்களை நிரந்தரம் செய்து காலமுறை ஊதி யம் வழங்க வேண்டும், அமைச்ச ரின் பரிந்துரையின் பேரில்  வழங்கப்பட்டுள்ள பணிமாறுதல் களை ரத்து செய்து, பொது பணியிட மாறுதலை அமல்படுத்த வேண்டும், டாஸ்மாக் நிர்வாகத்திற்கு இணையாக அமைச்சர் போட்டி நிர்வா கத்தை நடத்துவதை கைவிட வேண்டும், கடை ஊழியர்களை மிரட்டி மாமூல் கேட்கும் அமைச்சரின் ஏஜெண்டுகள் மீது  கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், மாவட்டங்களில் பெயரள விற்கு சில குடிப்பகங்களுக்கு (ஃபார்) அனுமதி கொடுக்கின்ற னர். அனுமதியின்றி பல  குடிப்பகங்கள் செயல்படுகின் றன. இதனால் அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது. இவ்வாறு செயல்படுவதை அதிகாரிகள் தடுக்க வேண்டும், தொழிற்சங்க முன்னணி உழியர்களை பழிவாங்கும் வகையில் செய்யப் பட்ட பணியிட மாறுதல்களை ரத்து செய்ய வேண்டும், டாஸ் மாக் நிர்வாக சீர்கேடுகளை சரி  செய்ய ‘நிர்வாக சீரமைப்புக் குழு’வை அமைக்க வேண்டும்  என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இந்தப்போராட்டத்திற்கு சிஐடியு தென்சென்னை மாவட்டச் செயலாளர் பா.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். டாஸ்மாக்  மாநில சம்மேளன பொதுச் செயலாளர் கே.திருச்செல்வன், நிர்வாகிகள் சதீஷ், ராமு, வடி வேலு, டியுசிசி மாநில பொதுச்  செயலாளர் ஆர்.திருப்பதி, மண்டலச்செயலாளர் சண்முகையா பாண்டியன், ஏஐசி சிடியு மாநிலத் தலைவர் எஸ்.இரணியப்பன் உள்ளிட்டோர் பேசினர்.