tamilnadu

மாணவி லாவண்யா தற்கொலை விவகாரம் மைக்கேல்பட்டி பள்ளியில் மதமாற்ற பிரச்சாரங்கள் ஏதும் இல்லை

தஞ்சாவூர், ஜன.28 - தஞ்சாவூர் கல்வி மாவட்டம் மைக்கேல்பட்டி  தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 பயின்ற மாணவி இறப்பு தொடர்பாக, தஞ்சாவூர் மாவட்டக் கல்வி அலுவலரின் விசாரணை அறிக்கை வியாழக்கிழமை மாலை வெளியானது. அந்த அறிக்கையில் கூறிருப்பதாவது: தற்கொலை செய்து கொண்ட மாணவி 8-ஆம் வகுப்பிலிருந்து மைக்கேல்பட்டியில் படித்து வந்தார். மாணவியின் சொந்த ஊர்  அரியலூர் மாவட்டம், வடுகபாளையம் கிராமம்  என்பதால், அப்பள்ளியின் அருகில் உள்ள மதகன்னிகைகள் வாழும் இல்லத்தில் தங்கி, கல்வி பயின்று வந்துள்ளார். மாண விக்கு உடலிலும், உதட்டிலும் வெண்புள்ளி கள் (vitilgo) உள்ளதாக விசாரணை யில் தெரிய வருகிறது. 2020 கொரோனா பெருந்தொற்று ஏற்படு வதற்கு முன் பள்ளியில் அரசு மற்றும் தொடர் விடுமுறை விடும்பொழுது, இல்லத்தில் உள்ள  மற்ற மாணவிகள் அவரவது சொந்த ஊர் களுக்கு தாய், தந்தையர்களிடம் செல்லும் போது, இம்மாணவி மட்டும் ஊருக்கு செல்லா மல் மதகன்னிகள் இல்லத்தில் விடுமுறை யை கழித்து பள்ளியில் தொடர்ந்து பயின்று வந்துள்ளார்.

கொரோனா காலத்துக்குப் பிறகு காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்ச்சி அறிவிக்கப்பட்ட போது மார்ச் 2020 இல் பத்தாம் வகுப்பில் 487 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்துள்ளார். மாணவி 2020-21 ஆம் கல்வியாண்டில் இப்பள்ளியில், பிளஸ் 1 வகுப்பில் கல்வி பயின்று, பிப்ரவரி 2021 இல் 9 நாட்களும், மார்ச் 2021 இல் 9 நாட்களும் என மொத்தம் 18 நாட்கள் நேரடி வகுப்பில் கல்வி பயின்றுள்ளார். மற்ற நாட்களில் இணைய வழிக்கல்வி நடைபெறும் போது மற்ற அனைத்து மாணவ, மாணவிகளும் கலந்து  கொள்ளும் போது இம்மாணவி மட்டும் இணையவழி வகுப்பில் பங்கு பெறவில்லை என தெரிய வருகிறது. பிளஸ் 2 வகுப்பில் செப்டம்பரில் 12 நாட் களும், அக்டோபரில் 14 நாட்களும், நவம்பரில் 13 நாட்களும், டிசம்பரில் 21 நாட்களும் மற்றும் ஜனவரியில் 10 நாட்களும் மதகன்னி கைகள் இல்லத்தில் தங்கி கல்வி பயின்று வந்துள்ளார் என தெரிய வருகிறது.

ஜன.10 ஆம் தேதி மாணவிக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டதால் (வயிற்று வலி மற்றும் வாந்தி) பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவரின் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.  ஜன.15 ஆம் தேதி பள்ளிக்கு காவலர்கள் சென்று விசாரணை மேற்கொண்ட போதுதான் பள்ளியில் அம்மாணவி தோட்டத்துக்கு வைத்துள்ள களைக்கொல்லி பூச்சி மருந்தைக் குடித்து தஞ்சாவூர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருவதாக பள்ளி தலைமையாசிரியை ஆரோக்கியமேரி தெரிவித்தார். மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் கடந்த பத்து ஆண்டுகளில் 5,270 இந்து மாணவ, மாணவி யர்களும், 2,290 கிறிஸ்தவ மாணவ, மாணவி யர்களும், 179 இஸ்லாமிய மாணவ, மாணவி யர்களும் கல்வி பயின்றுள்ளது தெரியவந்தது. மேலும், இந்த கல்வி ஆண்டில் 444 இந்து மாணவ, மாணவிகளும், 219 கிறிஸ்தவ மாணவ, மாணவிகளும், 405 இஸ்லாமிய மாணவ, மாணவிகளும் 6 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்து வருகின்றனர். இந்த  பள்ளியில் ஆண்டுதோறும் கல்வித்துறை அதிகாரிகளால் ஆய்வும் செய்யப்பட்டுள்ளது.  இப்பள்ளிக்கு முதன்மைக் கல்வி அலு வலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் நேரடி யாக ஆய்வு மேற்கொண்ட போதெல்லாம் மாணவ, மாணவிகளிடமிருந்து மதம் சார்ந்த புகார்கள் ஏதும் வரவில்லை. கிறிஸ்தவ மேலாண்மை நிறுவனத்தினரால் இப்பள்ளி நடத்தப்பட்டாலும், அதிகளவில் இந்து மத மாணவர்கள் கல்வி பயின்றுள்ளனர். இப்பள்ளியில் மத ரீதியான பிரச்சாரங்கள் ஏதும் தலைமையாசிரியராலோ அல்லது மற்ற ஆசிரியர்களாலோ, மாணவ, மாணவி களிடம் செய்யப்பட்டவில்லை என விசார ணையின் அடிப்படையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

;