தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழு - கு.சின்னப்ப பாரதி அறக்கட்டளை வழங்கும் முற்போக்கு கலைஇலக்கியத்திற்கு வாழ்நாள் பங்களிப்பு செய்த ஆளுமைக்கான விருது, எழுத்தாளர் ராஜ் கௌதமன் அவர்களுக்கு மாநில நிர்வாகிகளால் நெல்லையிலுள்ள அவரது இல்லத்தில் நேரில் வழங்கப்பட்டது. அவரது உடல்நலக் குறைவின் காரணமாக அவரது சார்பில் இணையர் முனைவர் பரிமளம், மகள் பொன்னி ஆகியோர் விருதினைப் பெற்றுக்கொண்டனர். தமுஎகச பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா, நிர்வாகிகள் ச.தமிழ்ச்செல்வன், நாறும்பூநாதன், உதயசங்கர், லஷ்மிகாந்தன், வெண்புறா, வண்ணமுத்து, மாதவராஜ், சண்முகம், ராஜகோபால் ஆகியோர் பங்கேற்றனர். டிசம்பர் 21 அன்று ஈரோட்டில் நடைபெறவிருக்கும் விழாவில் மற்ற விருதாளர்களுக்கு விருது வழங்கப்படும்.