tamilnadu

img

“திரு.வி.க.வுக்கு விரைவில் மணிமண்டபம்”: டி.ஆர். பாலு எம்.பி.

சென்னை, ஆக.26- தமிழ் தென்றல் திரு.வி.கல் யாணசுந்தரனார் 140ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி சென்னை போரூரை அடுத்த துண்டலம் பகுதி யில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கும் சிலைக்கு மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு, மதுரவாயல் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கணபதி, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, மண்டலக் குழுத் தலைவர் வே.ராஜன், அயப்பாக்கம் ஊராட்சி  மன்றத் தலைவர் அ.ம.துரை வீரமணி  ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். திரு.வி.க  வாழ்ந்த இல்லம் தற்போது நூலக மாக மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. பின்னர் டி.ஆர்.பாலு எம்பி  செய்தியாளர்களிடம் கூறியதாவது:- திரு வி க-வின் 140ஆவது பிறந்த நாள் விழா தமிழக அரசின் சார்பில்  தமிழ்நாடு முழுவதும் மிகச் சிறப்பாக  கொண்டாடப்பட்டு வருகிறது. திரு.வி.க.விற்கு இந்த பகுதியில் மணிமண்டபம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகி றது. விரைவில் மணிமண்டபம்  அமைக்கப்படும். ஒடிசா ரயில் விபத்து சம்பவத் துக்கு பிறகு ரயில்வே பாதுகாப்பு குறித்து 3 மாதங்கள் கடந்தும் ஒன்றிய அரசு இது குறித்து இது வரை பேசவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.