சென்னை, பிப். 13- அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்திருந்தால் தமிழ் நாடு சீரழிந்திருக்கும் என்றும் பாஜகவின் இழுத்த இழுப்புக்கெல்லாம் தலையாட்டக் கூடிய கட்சி யாக அதிமுகவும் அதன் தலைவர்களும் கடந்த காலத்தில் விளங்கினார்கள் என்றும் விடுதலை சிறுத்தை கள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் விமர்சித்துள்ளார். சென்னை மாநகராட்சி அம்பத்தூர் மண்டலத்திற் குட்பட்ட 84ஆவது வார்டில் போட்டியிடும் விஜயகுமார் மற்றும் 85ஆவது வார்டில் போட்டியிடும் பொற்கொடி கண்ணபிரானுக்கு ஆதர வாக திருமாவளவன் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், தேசிய அளவில் பாஜகவை தோலுரித்து மக்களிடையே அம்பலப்படுத்தும் ஆற்றல் மிக்க இயக்கமாக கம்யூ னிஸ்ட் கட்சிகள் இந்தியா முழுவதும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. வேளாண் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்பப் பெறும் வகையில், விவசாயி கள் 1 ஆண்டுக்கும் மேலாக வெற்றிகரமாக போராட் டத்தை நடத்தினார்கள் என்றால், அதில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவுடன் செயல்படுகின்ற விவசாய சங்கங்களின் பங்களிப்பு முக்கியம் என்பதை மறந்து விடக்கூடாது என்றார். அதிமுக பாஜகவின் இழுத்த இழுப்புக்கெல்லாம் தலையாட்டக் கூடிய கட்சியா கவும், அதன் தலைவர்களும் விளங்கினார்கள். மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்திருந் தால் தமிழ்நாடு சீரழிந்திருக் கும், இந்த நாசகார சக்திக ளின் பிடியில் சிக்கியிருக்கும் என்றும் அவர் கூறினார்.