தில்லி படையெடுப்புக்கு ஒருபோதும் தமிழ்நாடு வீழாது பாஜக - அதிமுக கூட்டணியை 2026 தேர்தலிலும் தோற்கடிப்போம்!
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் சூளுரை
மதுரை, ஜூன் 1 திமுக பொதுக்குழு கூட்டம், மதுரை உத்தங்குடி யில் ஞாயிறன்று நடை பெற்றது. 3,000-க்கும் மேற் பட்ட பொதுக்குழு உறுப்பி னர்கள் மற்றும் சிறப்பு அழை ப்பாளர்கள் 7000 ஆயிரம் பேர் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த பொதுக் குழுவின் துவக்கமாக, 100 அடி உயரக் கொடிக்கம்பத் தில் திமுக கொடியை, கட்சி யின் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டா லின் ஏற்றிவைத்தார். பின்னர் மாநாட்டில் அவர் உரை யாற்றினார். அப்போது அதி முக - பாஜக கட்சிகளைக் கடுமையாக விமர்சித்தார். பழனிசாமி சரணாகதி “எடப்பாடி பழனிசாமி தில்லி சென்று அமித் ஷா-விடம் சரணடைந்துவிட்டார். சசிகலா இவரை முதலமை ச்சராக அறிவித்தபோது எப்படி நடித்தாரோ, அதே மாதிரி நடிப்பு. காலில் மட்டும் விழவில்லை” என்று சாடினார். பாஜக கட்டுப்பாட்டில் அதிமுக “ஒரு மாநிலத்தில், ஒரு கூட்டணிக்கு யார் தலைமை வகிக்கிறார்களோ, அவர்கள் தான் கூட்டணியை அறி விப்பார்கள்! ஆனால், இங்கு அமித் ஷா அறிவிக்கிறார். இதிலிருந்தே இவர்கள் லட்ச ணத்தை நாம் புரிந்து கொள்ளலாம்! ஒட்டுமொத்தமாக அதிமுக பாஜக-வின் கட்டுப்பாட்டு க்கு சென்றுவிட்டது. அடுத்து ஒட்டுமொத்த தமிழ்நாட்டை யும் பாஜக-வின் கட்டுப் பாட்டுக்கு கொண்டு செல்ல பழனிசாமி துடிக்கிறார்” என்றும் குற்றம்சாட்டினார். எந்த ‘ஷா’வும் ஆள முடியாது ஆனால், “எந்த ஷா வந்தாலும் தமிழ்நாட்டை ஆள முடியாது. தில்லிக்கு தமிழ்நாடு எப்போதுமே ‘அவுட் ஆப் கண்ட்ரோல்’ தான்” என்று மீண்டும் உறுதி யுடன் தெரிவித்தார். “பொருளாதார ரீதியான முட்டுக்கட்டைகள், அரசியல் ரீதியான முட்டுக் கட்டைகள், ஆளுநர் வழி யாக முட்டுக்கட்டைகள், உரிமைகளை அபகரிக்கும் முட்டுக்கட்டைகள் என்று எத்தனை எத்தனையோ தடைகளை ஒன்றிய பாஜக அரசு போட்டு வருகிறது. நமக்கு நியாயமாக ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்காமல், தமிழ்நாட்டை பொருளாதார ரீதியாக முடக்க நினைத்தாலும், அந்த நெருக்கடிகள் அனைத்தையும் கடந்து, மக்களுக்கான நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்” என்றார். தமிழகத்திற்கு எதிரானது பாஜக! “பாஜக கூட்டணி ஆட்சி வந்தால், - மதக்கலவரங் களை உண்டாக்குவார்கள், சாதிக்கலவரங்களைத் தூண்டுவார்கள், மக்களைப் பிளவுபடுத்துவார்கள், தொழில் மற்றும் கல்வி வளர்ச்சியைத் தடுப்பார்கள், இந்தி மொழித் திணிப்பில் ஈடுபடுவார்கள் - தமிழ் நாட்டின் தனித்துவத்தை அழிப்பார்கள்” என்று முதல் வர் எச்சரிக்கை விடுத்தார். “பாஜக-விடம் இருந்து தமிழ்நாட்டைக் காப்பாற்றும் கட்சி கட்டமைப்பும், கொள்கைப் பிடிப்பும், வலிமையான தலைமையும் திமுகவிடம் இருக்கிறது” என்று குறிப்பிட்டார். 2026 தேர்தல் இலக்கு “திமுக தொண்டர்கள், தேர்தல் களத்திற்கு பரப்பு ரைக்குச் செல்லும்போது, தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் ஏற்பட்டி ருக்கும் வளர்ச்சி கடந்த காலத்தோடு ஒப்பிட்டு மக்க ளிடம் எடுத்துரைக்க வேண்டும். நாம் மக்களுக் காக என்ன எல்லாம் செய்திருக்கிறோம் - நம்மு டைய ஆட்சியில் செய்யப் பட்டிருக்கும் திட்டங்களால், அந்தந்த மாவட்டங்கள், அந்தந்த தொகுதிகள் பெற்ற பலன்கள் என்ன என்பதை விளக்கிச் சொல்ல வேண்டும். அடுத்த ஆண்டு இதே நேரத்தில் ‘ஏழாவது முறையாக திமுக ஆட்சி அமைத்தது, வரலாறு காணாத வெற்றி பெற்றது’ என்ற தலைப்புச் செய்தி வர வேண்டும்” என்றும் திமுக தொண்டர்களை அவர் கேட்டுக் கொண்டார்.