எஸ்.ஐ.ஆர். என்ற அநீதிக்கு எதிராக தமிழ்நாடு போராடும், வெல்லும்
அமைச்சர் கே.என். நேரு அறிக்கை சென்னை: எஸ்.ஐ.ஆர். என்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் எனும் அநீதிக்கு எதிராக தமிழ்நாடு போராடும், வெல்லும் என அமைச்சர் கே.என். நேரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், பாஜகவுக்கு எதிரான வாக்குகளைப் பறிப்பதே வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தத்தின் நோக்கம் என்று கூறியிருக்கும் கே.என். நேரு, தில்லுமுல்லு செய்து வெற்றியை ஈட்ட முனையும் பாஜகவின் நடவ டிக்கைக்கு தேர்தல் ஆணையம் துணை போகிறதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். எஸ்.ஐ.ஆர். மாநிலங்களிலும் விரைவில் செயல் படுத்தப்படும் என தெரிவித்துள்ள தலைமை தேர்தல் ஆணையர், வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து ஆதாரங்களோடு ராகுல் எழுப்பிய கேள்விகளுக்கு ஆணையம் பதில் தரவில்லை என்றும் குற்றம் சாட்டி யுள்ளார்.