tamilnadu

img

உயர்நீதிமன்ற வழிகாட்டுதல் கவனத்தில் கொள்ளப்படும் கூட்ட நெரிசல் விபத்துகளைத் தடுப்பதிலும் தமிழ்நாடு வழிகாட்டும்!

உயர்நீதிமன்ற வழிகாட்டுதல் கவனத்தில் கொள்ளப்படும் கூட்ட நெரிசல் விபத்துகளைத்  தடுப்பதிலும் தமிழ்நாடு வழிகாட்டும்

சென்னை, அக். 4 - தமிழ்நாடு முத லமைச்சர் மு.க. ஸ்டாலின் தமது ‘எக்ஸ்’ பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி யிருப்பதாவது: கரூரில் நடந்த துயரத்தால் அனை வருமே நெஞ்சம் கலங்கிப் போயிருப்ப தாகவும், தம் அன்புக்குரியோரை இழந்து தவிக்கும் ஒவ்வொரு குடும்பத்தின் கண்ணீரையும் கண்டு தவிப்பதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார். மாண்புமிகு உயர்நீதிமன்ற உத்தர வின் பேரில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு  புலனாய்வுக் குழு (SIT) தனது விசார ணையைத் தொடங்கும் என்றும், இதன்  மூலம் முழு உண்மையையும் வெளிக் கொண்டு வருவோம் என மாநிலத்தின் முத லமைச்சராக மக்களுக்கு உறுதி யளிப்பதாக தெரிவித்துள்ளார். அனைத்து  மட்டங்களிலும் பொறுப்பு உறுதிசெய்யப் படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பலவற்றிலும் இந்தியாவுக்கே முன்னோடியான தமிழ்நாடு, கூட்ட நெரிசல் விபத்துகளைத் தவிர்ப்பதிலும் நாட்டுக்கு வழிகாட்டும் என்று குறிப்பிட்டி ருக்கும் முதலமைச்சர், மாநிலம் முழுவதும் துறைசார் வல்லுநர்கள்,  அரசியல் கட்சியினர், செயற்பாட்டா ளர்கள், பொதுமக்கள் என அனைவரோடும் கலந்தாலோசித்து ஒரு முழுமையான நிலை யான வழிகாட்டு நெறிமுறைகளை (SOP) வடிவமைப்பதாக தெரிவித்துள்ளார். இது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவும் பின்பற்றத்தக்க மாடலாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள் ளார். துடைக்க முடியாத இந்த துயரச் சம்பவத்தின் பின்னணியில் அரசியல் நோக்கோடு ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாமல் ஒரு நீண்டகாலத் தீர்வை  நோக்கிப் பயணிப்போம் என்று வேண்டு கோள் விடுத்துள்ள முதலமைச்சர், இந்த கூட்டு முயற்சியில் அனைவரது யோசனைகள் மற்றும் ஆலோசனை களையும் வரவேற்பதாக தெரிவித்துள் ளார். ஒவ்வொரு உயிரும் விலைமதிப்பில் லாதது என்று குறிப்பிட்ட அவர், மக்களின் இன்னுயிரைக் காக்கவும், இனி இப்படி ஒரு பெருந்துயரம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் எங்குமே நிகழாமல் தடுக்கவும் ஒன்றிணைவோம் என்று அழைப்பு விடுத்துள்ளார்.