சென்னை, மார்ச் 3- காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்ப டுத்த காலநிலை அறிவு இயக்கத்தை தொடங்க உள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழு வின் முதல் கூட்டம் முதல்வர் தலைமையில் வெள்ளி யன்று (பிப்.3) தலைமைச் செயலகத்தில் நடை பெற்றது. இந்தக் கூட்டத்தில் முதல்வர் பேசுகையில், “காலநிலை அபாயங்களை அதிக அளவில் எதிர் கொள்ளக் கூடிய உலகின் ஐம்பது இடங்களின் பட்டி யலில் இந்தியா 9 வது இடத் தில் உள்ளதாக தரவுகள் சொல்கின்றன. தமிழ்நாடு 36 வது இடத்தில் இருக்கிறது என்கிறது இந்தத் தரவு” என்றார். புதிய திட்டம் அகழி, அருவி, ஆழிக் கிணறு, ஆறு, இலஞ்சி, உறை கிணறு, ஊருணி, ஊற்று, ஏரி, ஓடை எனத் தன்மைக்கும் தேவைக்கும் ஏற்ப 47 வகையான நீர்நிலை கள் இருந்த வளமான அறிவுச் சமூகம்தான் தொன் மையான தமிழ்ச் சமூகம். ஒரு மாநிலத்தை கார்பன் சம நிலையை எட்டிய மாநில மாக அறிவிக்க வேண்டு மெனில், அந்த மாநிலத் தில் உள்ள அனைத்து பகுதி களும் கார்பன் சமநிலையை அடையவேண்டும். தமிழ் நாட்டில் உள்ள 10 கிராமங்களை மீள்தன்மையு டைய கிராமங்களாக மாற்று வதற்கான திட்டம் துவக்கப் படுகிறது எனவும் முதல்வர் கூறினார்.
வெப்ப அலைகள்
இனிவரும் மாதங்க ளில், கடுமையான வெப்ப அலைகளை நாடு சந்திக்கும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. வெள்ளம், புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களை கையாளுவது போல், நாம் வெப்ப அலைகளையும், புதிய புதிய நோய்களையும் கையாளத் தயாராக வேண்டும். இன்னும் சில மாதங்களில் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு துறையும் எவ்வளவு கார்பனை வெளி யிடுகின்றன என்பதை அறி வியல்பூர்வமாக வெளியிட உள்ளோம். அதனை இந்தக் குழு அல்லது இந்தக் குழு அமைக்கும் துணைக் குழுக் களோ ஆய்வு செய்து, இந்தி யா கார்பன் சமநிலையை அடையும் என்று சொல்லப் படும் 2070ஆம் ஆண்டுக்கு முன்னராகவே தமிழ்நாடு கார்பன் சமநிலையை அடைய இலக்கு நிர்ண யம் செய்யும் என்றும் தெரி வித்தார். இந்தியாவிற்கு சமூக நீதியில் மட்டுமல்ல, சூழலி யல் நீதியிலும் வழிகாட்டும் என்று உறுதியாக தெரி வித்து, அதற்கான அனைத்து திட்டங்களையும் அரசு செயல்படுத்தும் என்றும் நான் தெரிவித்துக்கொள் கிறேன். இது தமிழ்நாடு அரசு மட்டும் செய்யக்கூடிய வேலையல்ல, ஊர்கூடித் தேர் இழுக்க வேண்டும், அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் கூறினார்.