திருச்சிராப்பள்ளி, அக்.7 - 5 ஆவது தென்னிந்திய அளவிலான ரோல் பால் போட்டி, தமிழ்நாட்டில் பெரம்பலூரில் கடந்த செப்.28, 29 ஆகிய தேதிகளில் நடந்தது. 11 வயதுக்கு உட்பட்டோருக்கான இப்போட்டியில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, புதுச்சேரி மற்றும் அந்தமான் அணிகள் கலந்து கொண்டன. தென்னிந்திய ரோல்பால் செயலாளர், சர்வதேச நடுவர் சுப்பிரமணியம், ஸ்போர்ட்ஸ் தமிழ்நாடு ரோல் பால் அசோசியேசன் செயலாளர் கோவிந்தராஜ், துணைத் தலைவர் பிரேம்நாத், தலைமை பயிற்சியாளர் ராஜசேகர் தலைமையில் தமிழக அணிகள் கலந்து கொண்டன. இதில் ஆண்கள் பிரிவு இறுதிப் போட்டியில் தமிழகம்-கேரளா அணிகள் மோதின. தமிழக அணி 5-2 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. பெண்கள் பிரிவு இறுதி ஆட்டத்தில் தமிழக அணி ஆந்திராவை எதிர்கொண்டு விளையாடியது. இதில் தமிழக அணி 7-5 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை பெற்றது. வெற்றி பெற்று, திருச்சி திரும்பிய தமிழக அணிக்கு, மாநிலத் துணைத் தலைவர் சரவணன், திருச்சிராப்பள்ளி மாவட்ட சாய்ஜி ரோல் பால் சங்க செயலாளர் மதுமிதா, பொருளாளர் காயத்ரி, தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் மணிகண்டன், கடலூர் மாவட்ட துணைச் செயலாளர் சிவக்குமார் திருவாரூர் மாவட்டத் தலைவர் லோகநாதன் மற்றும் பெற்றோர்கள், உறவினர்கள், உற்சாக வரவேற்பு அளித்தனர்.