tamilnadu

3-ஆவது வாரமாக முடங்கியது தமிழகம் கடைகள் அடைப்பு, சாலைகள் வெறிச்சோடின

சென்னை, ஜன.23- 3ஆவது வாரமாக ஞாயிற்றுக்கிழமை  முழு ஊர டங்கு கடைபிடிக்கப்பட்டதால் மாநிலம் முழு வதும்அனைத்து கடைகள்அடைக்கப்பட் ்டிருந்ததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட் ்டன. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 6-ந்தேதி முதல் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கும் கடை பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 8, 16 ஆகிய தேதிகளில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் 3-வது வாரமாக ஞாயிறன்று (ஜன.23)  முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. சனிக்கிழமை இரவு 10 மணியில் இருந்து திங்கட் கிழமை அதிகாலை 5.30மணி வரை ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. ஞாயிறன்று முகூர்த்ததேதி என்பதால்  திருமணத்திற்கு செல்ல மக்கள் அனுமதி க்கப்பட்டனர். சென்னை உள்பட தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ்முழு ஊரடங்கு தீவிரமாக கடை பிடிக்கப்பட்டது. இதன் காரணமாக மக்கள் நடமாட் ்டமின்றி அனைத்து மாவட்டங்களிலும் நகர்ப்புறங் ்களில் உள்ள முக்கிய சாலைகள் மற்றும் ஊரக பகுதிகளில் உள்ள சாலைகள் என அனைத்து சாலைகளும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு தீவிர சோதனை நடை பெற்றது.

ஆள்நடமாட்டமின்றி தமிழகம் முழுவதும் 3-வது வாரமாக மக்கள் வீடுகளில் முடங்கி இருந்தனர். இதனால் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒவ்வொரு வாரமும் பரபரப்பாக காணப்படும் கடை வீதிகள் அனைத்தும் ஆள்நடமாட்டமின்றி காணப் ்பட்டது. சென்னையில்,ஆர்கேநகர்,ராயபுரம் தி.நகர், பாரிமுனை, வண்ணாரப் பேட்டை, புரசைவாக்கம், மாதவரம், பெரம்பூர், செங்குன்றம், அண்ணாநகர், கோயம்பேடு உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மக்கள் அதிகம் கூடும் மார்க்கெட்டுகள், வணிக பகுதிகள் ஆகியவையும் மூடப்பட்டு இருந்தன. இதுபோன்று தமிழகம் முழுவதும் முக்கியமான சந்தைகள், வணிக பகுதிகள் ஆகியவையும் செயல் ்படவில்லை.

காவல்துறை கண்காணிப்பு

சென்னையில் ஊரடங்கை மீறி மக்கள் வெளியில் சுற்றுகிறார்களா? என்பதை கண்கா ணிக்க தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இதேபோன்று திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, கோவை, சேலம், நாமக்கல், தர்மபுரி, ஈரோடு, திண்டுக்கல், கடலூர், விழுப்புரம் உள்பட அனைத்து முக்கிய நகரங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டு இருந்தன. தேவையின்றி சுற்றித்திரிந்தவர்களை பிடித்து காவல்துறையினர்  விசாரணை நடத்தி அபராதம் விதித்தனர்.

விலக்கு

முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போதிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முக்கிய பணி களுக்கு தடைவிதிக்கப்படவில்லை. அந்த வகை யில் அத்தியாவசிய பணியாளர்கள்இன்று வழக்கம்போல தங்களது பணியை மேற்கொண் ்டனர். தூய்மை பணியாளர்கள், மருத்துவமனை ஊழியர்கள், பெட்ரோல் பங்க் பணியாளர்கள், பத்திரிகையாளர்கள், பால் விநியோகம் செய்ப வர்கள் உள்ளிட்டோர் வழக்கம்போல தங்களது பணிகளை மேற்கொண்டனர். இப்படி அத்தியா வசிய பணிகளில் ஈடுபட்டவர்களிடமும் அடை யாள அட்டையை வாங்கி பரிசோதித்த பிறகே அனு மதித்தனர். முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலை யிலும் ஓட்டல்கள் திறந்து இருந்தன. சாப்பிடு வதற்கு அனுமதி அளிக்கப்படாத நிலையில் பார்சல்கள் மட்டும் வழங்கப்பட்டன. இதுபோன்று பார்சல்களை வாங்குவதற்கு அருகில் உள்ள ஓட்டல்களுக்கு உணவு டெலிவரி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் வந்திருந்தனர். ஓட்டல் உரிமையாளர்கள் அவர்களிடம் தனித்தனியாக நின்று சமூக இடைவெளியை பின்பற்றி பார்சல் ்களை வாங்கி செல்ல அறிவுறுத்தினர். ஓட்டல்க ளுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் டீக்க டைகள் மூடப்பட்டே இருந்தன. இதனால் சைக்கிள் ்களில் பலர் கேன்களில் எடுத்துச் சென்று டீ விற்பனை யில் ஈடுபட்டனர்.

பாதுகாப்பு பணிகள்

சென்னையில் பல இடங்களில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கின் ்போது இதுபோன்று டீ விற்பவர்களை அதிகம் காண முடிந்தது. அந்த வகையில் இன்றும் கேன் டீ விற்பவர்கள் சாலைகளில் சுற்றித்திரிந்தனர். அவர்களிடம் கூட்டம் சேர விடக்கூடாது என்று போலீசார் எச்சரித்தனர். முழு ஊரடங்கு காரணமாக தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள டி.ஜி.பி. சைலேந்திரபாபு அறிவுறுத்தி இருந்தார். இதன்படி அனைத்து மாவட்டங்களிலும் போலீஸ் சூப்பிரண்டுகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.