tamilnadu

img

முதுகலை ஆசிரியர் பணி தொகுதிக்கு முதலில் கலந்தாய்வு

சென்னை, பிப். 14- முதுகலை ஆசிரியர் பணி தொகுதிக்கு கலந்தாய்வு நடத்திய பின்னர் பிற கலந்தாய்வுகளை நடத்த வேண்டும் என தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் சென்னை பள்ளிக் கல்வி இயக்ககம் முன்பு மாநிலத் தலைவர் இரா.பெரு மாள்சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநிலப் பொதுச் செயலாளர் சே.பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து இரா.பெருமாள்சாமி கூறுகையில், பள்ளிக் கல்வித் துறை மற்றும் தொடக்கக் கல்வி துறையில் 2021-2022ஆம் கல்வியாண்டிற்கான பொதுமாறுதல்கள் மற்றும் பதவி உயர்வுகள் சார்பாக நெறிமுறைள் ஆணை வெளியிடப்பட்டு அட்ட வணை 24.1.22 முதல் 5.03.22 வரை திட்டமிடப்பட்டு அனைத்து இடங்களும் வெளிப்படையாக காண்பிக்கப்பட்டு ஒளிவு மறைவு இன்றி சிறப்பாக நடை பெற்று வருகிறது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் இடைக்கால தீர்ப்புக்கு இணங்க, மாறுதல் கலந்தாய்வில் முன்னுரிமை பட்டியலில் திருத்தம் செய்ய ஏதுவாக, 11.2.22 மற்றும் 12.2.22 ஆகிய இரு நாட்களில் அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பணி புரியும் முதுகலை ஆசிரியர்உள்ளிட்ட ஆசிரியர்களுக்கு வருவாய் மாவட்டத் தில் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் நடைபெறவுள்ள மாறுதல் கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் 14.2.22 முதல் திட்டமிட்ட கால அட்டவணைப்படி ஏனைய கலந்தாய் வுகள் நடைபெறும் என்ற அறிவிப்பு முதுகலை ஆசிரியர்களுக்கு கலந் தாய்வு மாறுதலுக்கான வாய்ப்பு அளிக்காமல் அதற்கு அடுத்த நிலை யில் இருக்கும் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு அளிக்கும் கால அட்ட வணை தொடங்குவதால் சுமார் 30 ஆயிரம் முதுகலை ஆசிரியர் பணி தொகுதியில் பொது மாறுதலுக்காக விண்ணப்பித்துள்ள 10,802 முதுகலை ஆசிரியர்களுக்கு மாறுதல் அளிக்கா மல் செய்யும் நிகழ்வு நடைபெற்று விடும்.

முதுகலை ஆசிரியர் பணி தொகு திக்கு பாதிப்பு உண்டாகி விடும் சூழல் இருப்பதால் தமிழக அரசு நடப்பாண் டில் கலந்தாய்வு நடத்துவதற்கான கொள்கை முடிவு எடுத்ததின் நீதி அனை வருக்கும் சமமானதாக இல்லாமல் போய்விடும். எனவே முதுகலை ஆசிரியர் பணி தொகுதிக்கு கலந்தாய்வு நடத்திய பின்பு அதற்கு அடுத்த நிலையில் இருக்கும் கலந்தாய்வு பதவி உயர்வு நடைமுறைகள் தொடங்கினால் மட்டுமே சரியான கலந்தாய்வாக அமையும். தமிழக அரசு உடனடியாக தலை யிட்டு செவ்வாயன்று நடைபெறும் பட்டதாரி ஆசிரியர்களின் பதவி உயர்வு கலந்தாய்வை நிறுத்தி வைத்து முதுகலை ஆசிரியர்களுக்கான இட மாறுதல் கலந்தாய்வு நடத்திய பின்பு தொடர்ச்சியான கால அட்டவணையில் கலந்தாய்வு நடைமுறைகள் தொடங்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.