tamilnadu

உடையின் பெயரால் மதப் பதற்றத்தை உருவாக்குவதா?

சென்னை, பிப்.9- உடையின் பெயரால் மதப் பதற்றத்தை உருவாக்கும் மதவெறி கும்பலுக்கு தமிழக  மக்கள் ஒற்றுமை மேடை கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. இது குறித்து ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர் அருணன், க.உதயகுமார் விடுத்துள்ள அறிக்கைவருமாறு:- கர்நாடகத்தில் அரசு கல்வி நிறுவனங்க ளில் இஸ்லாமிய மாணவிகள் ``ஹிஜாப் எனப்படும் உடை அணிந்து வரக்கூடாது என்று கெடுபிடி செய்யப்படுகிறது. அப்படி அணிந்து வரும் மாணவிகளுக்கு எதிராக சங்பரிவாரத்தை சார்ந்த மாணவர்கள் களம் இறக்கப்பட்டு உள்ளார்கள். அவர்கள் ஏட்டிக்குப் போட்டியாக காவித் துப்பட்டா அணிந்து வருவோம் என்று வம்பு செய்கி றார்கள். விவகாரம் மாநிலம் முழுக்க பரவி சட்டம்- ஒழுங்கு பிரச்சனை ஆகியுள்ளது.

பிளவுபடுத்தும் அரசியல்!

கல்வி நிறுவனத்திற்கு ``ஹிஜாப்’ அணிந்து தனியாக வந்த ஒரு முஸ்லிம் மாணவியிடம் சங்பரிவார கோஷ்டி ஒன்று, ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்டு மிரட்டிய போது, அதற்கு சிறிதும் அஞ்சாமல் அந்தப்  பெண் எதிர்க் குரல் கொடுப்பதும் சமூக  ஊடகங்களில் பரவி அங்குள்ள  நிலைமை யின் தீவிர தன்மையை உணர்த்துவதாக உள்ளது. உணவு, உடை, காதல், மதம்  என்னும் மக்களின் தனிப்பட்ட உரிமைக ளில் ஆர்எஸ்எஸ் பாஜக கூட்டம் உத்தரவு போட்டு வருகிறது. அதன் நோக்கம் சிறு பான்மை மக்கள் இரண்டாம் தர குடி மக்களே என  நிறுவுவதாகும். அப்படியாக  மக்களை மத அடிப்படையில் பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் அடைய துடிப்பதாகும். சங்பரிவாருக்கு பெண் உரிமை காக்கும் நோக்கமெல்லாம் கிடையாது என்பதை சபரிமலை விஷயத்தில் அறிந் தோம். அங்கே இளம் வயது இந்து பெண் களை கோயிலுக்குள் அனுமதிக்கக் கூடாது  என்று இப்போதும் சண்டித்தனம் செய்து  வருகிறார்கள். இதுதொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பையும் உதாசீனப்படுத்தி வருகி றார்கள். இந்த லட்சணத்தில் பெண்களின் உரிமைகளுக்காக இந்த எதிர்ப்பு என்பது மோசடி வாதமாகும்.

கல்வி நிறுவனங்களில் மத அடை யாளங்களே கூடாது என்றால் சகல மத அடையாளங்களையும் தடை செய்ய வேண்டும். பிற மத அடையாளங்களை அனு மதித்து விட்டு  ஹிஜாப் அணிவதை மட்டுமே தடுப்பது நியாயமாகாது. இந்த தடை  முஸ்லிம்கள் மீது சங்பரிவாருக்குள்ள வெறுப்பையும் வன்மத்தையும் காட்டுகிறது. அதன் மூலமாக இவர்கள் அரசியல் ஆதா யம் தேடுவது மட்டுமல்லாது, முஸ்லிம் பெண்களின் கல்வியையும் பறிக்கப் பார்க் கிறார்கள். எனவே கல்வி நிறுவனங்களில் ‘ஹிஜாப்’ அணிய தடை என்பதையும் அதன்  பெயரில் சங்பரிவாரம் செய்யும் அடாவடித் தனங்களையும் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை வன்மையாகக் கண்டிக்கிறது.  இப்படி எந்த தடையும் விதிக்கக் கூடாது என்றும் இதுதொடர்பாக அராஜகங்களில் இறங்கும் சங்பரிவாரத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்றும் கர்நாடக மாநில அரசை மேடை வலி யுறுத்துகிறது.

ஒன்றிய அரசு கண்டிக்க வேண்டும்

இந்த அக்கிரமத்தை கண்டிக்க ஒன்றிய  அரசு முன்வர வேண்டுமென்று வற்புறுத் துகிறது. வேறு ஒரு மாநிலத்தில் நடக்கிற விஷயமாக  தமிழக மக்கள் இதை எளிதாக  கடந்து போய் விடக்கூடாது. மதவெறி என்பதும் ஒரு மோசமான தொற்றுநோயே. அது தமிழ்நாட்டுக்கு உள்ளும் பரவலாம். ஏற்கனவே புதுச்சேரிக்கும் அது புகுந்து விட்டது. அங்கும் ஓர் அரசுப் பள்ளியில் ‘ஹிஜாப்’ அணியக்கூடாது என்று மாணவி கள் மிரட்டப்பட்டு உள்ளனர். எனவே தமிழக மக்களும் எச்சரிக் கையாக இருக்க வேண்டும். உடையின் பெயரால் முஸ்லிம் மக்களுக்கு எதிராக நடத் தப்படும் இந்த அநியாயத்தை தட்டிக்கேட்க நியாய உள்ளம் படைத்த அனைவரும் முன் வர வேண்டும். இவ்வாறு தெரிவித்திருக்கிறார்கள்.