tamilnadu

கொலைகாரன் கோட்சேவுக்கு ஆதரவாக கோவை போலீஸ்!

சென்னை,ஜன.31- கொலைகாரன் கோட்சேவுக்கு ஆதரவாக நடந்துகொண்ட கோவை காவல்துறை அதிகாரிகளுக்கு தமிழக மக்கள் ஒற்றுமை மேடை மற்றும்  அரசியல் கட்சித் தலைவர்கள் கண்ட னம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தமிழக மக்கள்  ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பா ளர்கள் பேரா.அருணன், க.உதய குமார் விடுத்துள்ள அறிக்கை வரு மாறு:- மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட தினத்தன்று கோவை யில் மக்கள் ஒற்றுமை மேடை சார்பாக அஞ்சலியும், மதவெறி எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பும் செய்யப்பட்டது. இந்த நிகழ்வின்போது காவல்துறை அதிகாரிகள் குறுக்கே புகுந்து அடாவடித்தனம் செய்துள்ளனர். கொலைகாரன் கோட்சே பெயரை உச்சரித்ததும், அவன் மதவெறி கொண்டே மகாத்மாவை சுட்டுக் கொன்றான் என்பதைக் குறிப்பிட்டதும் தவறு என்று அந்த அதிகாரிகள் வாக்குவாதம் செய்துள்ளனர்.

இது கோவை காவல்துறைக்குள் சங் பரிவாரத்தின் மதவெறிச் சிந்தனை ஊடுருவி இருப்பதை எடுத்துக் காட்டு கிறது. கடந்த அதிமுக ஆட்சியில் சங்  பரிவாரம் சொல்படிதான் காவல்துறை நடக்க வேண்டும் எனும் எழுதப்படாத உத்தரவு இருந்ததை திமுக கட்சி வந்த பிறகும் கோவை காவல்துறை அதிகாரிகள் கடைப்பிடிப்பதாகவே தெரிகிறது. “கோட்சேவின் வாரிகளுக்கும், அவர்களது தீய எண்ணங்களுக்கும் இந்திய மண்ணில் இடம் இல்லை” என்று மிகச் சரியாக குறிப்பிட்டிருக் கிறார் தமிழ்நாடு முதல்வர்.ஸ்டாலின். ஆனால் கோவையில் கோட்சேவின் வாரிசுகள் காவல்துறைக்குள்ளேயே புகுந்திருப்பதாக தெரிகிறது. அவர்களை களை எடுக்க வேண்டும்.  அடாவடித்தனத்தில் ஈடுபட்ட அந்த போலீஸ் அதிகாரிகள் மீது முதல்வர்  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மக்கள் ஒற்றுமை  மேடை தன்னளவில் மத நல்லிணக்கத் திற்காகவும், மக்கள் ஒற்றுமைக்காக வும் விடாது போராடி வருகிறது. இந்தப்  போராட்டத்தை அது மேலும் முன்னெடுத்துச் செல்லும் என்று உறுதி  ஏற்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

பேசும் உரிமையை மறுப்பதா? இரா. முத்தரசன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேச தந்தை அண்ணல் காந்தி 1948 ஜனவரி 30ஆம் தேதி சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். உலகை உலுக்கிய இந்தப் படுகொலை சம்பவத்தின் முதல் குற்றவாளி நாதுராம் கோட்சே என்பதையும், இந்து மதவெறி கொண்டு ‘மகாத்மா’  அழித்தொழிக்கப்பட்டார் என்பதையும் நாடும், மக்களும் நன்கறிவர்” என்று கூறியுள்ளார். தேச தந்தையை மதவெறி பிடித்து, படுகொலை செய்த குற்றவாளிக்கு, நீதிமன்றம் தூக்குதண்டனை வழங்கி  நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த உண்மையை சொல்லவும் காவல் துறை அனுமதிக்காது எனில் அரசியல் அமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை கோவை மாநகரக் காவல்துறை பலவந்தமாக பறிக்கும் செயலாகும். கோவை மாந கரக் காவல்துறையின் சட்ட அத்து மீறலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற் குழு வன்மையாகக் கண்டிக்கிறது. அத்துமீறிய காவல்துறை அதிகாரிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி யுள்ளார்.

காவல்துறையில் கோட்சே வாரிசுகள்: திருமா சாடல்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்,“ காந்தி நினைவு நாளையொட்டி சனா தன பயங்கரவாதத்திற்கு எதிராக கோவையில் உறுதிமொழி ஏற்றுள்ள னர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தோழர் ஜி.இராமகிருஷ்ணன் சொல்லச் சொல்ல மற்றவர்கள் திரும்பச் சொல்லி உறுதிமொழி ஏற்கும் நிகழ்வின்போது திடுமென காவல்துறையினர் அங்கே வந்து அதனைத் தடுத்துள்ளனர். காந்தியைக் கொன்றது கோட்சே என்றும் ஆர்எஸ்எஸ் பயங்கரவாதிகள், இந்து  மதவெறியர்கள் என்றும் கூறக் கூடாதென அப்பகுதியைச் சார்ந்த காவல் துணைக் கண்காணிப்பாளரும் வேறு சில காவல் அதிகாரிகளும் தடுத்து வாக்குவாதம் செய்துள்ளனர். இந்த நிகழ்வு மிகுந்த வியப்பையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார். சமூகநீதி அரசின் கீழ் பணி யாற்றும் காவல்துறையினர், மதவெறி பிடித்த  சனாதனச் சங்கிகளைப்போல  நடந்திருப்பதை மிக வன்மையாகக் கண்டிக்கிறோம். சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கிறோம் என்னும் பெயரில் மதம் சார்ந்து செயல்படும் காவல் துறையினரின் இந்தப்போக்குக்  கருத்துரிமையைப் பறிக்கும் சனநாயக  விரோத அடாவடிப் போக்கு மட்டுமின்றி, மதவாத நடவடிக்கை யுமாகும். எனவே, மதச்சார்பின்மைக் கெதிராகச் செயல்பட்டுள்ள காவல் அதிகாரியின் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  வலியுறுத்தியிருக்கிறார்.