சென்னை,மார்ச் 25- தமிழ்நாடு சட்டப்பேரவை மீண்டும் ஏப்ரல் 6 ஆம் தேதி கூடுகி றது என்று மு.அப்பாவு தெரிவித் தார். தமிழக சட்டசபை மீண்டும் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6 ஆம் தேதி கூடும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் 2022-23 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த வாரம் 18 ஆம் தேதி தொடங்கி மார்ச் 24 அன்று நிறைவடைந்தது. இந்த நிலையில் , பேரவைத் தலைவர் மு.அப்பாவு சென்னை தலைமைச் செயலகத்தில் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக சட்டப்பேரவை ஏப்ரல் 6 ஆம் புதன்கிழமை மீண்டும் கூடுகிறது. அன்றைய தினமே மானிய கோரிக்கைகள் எடுத்துக் கொள்ளப்படும். கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது? எந்தெந்த துறைகள் மீதான மானிய கோரிக்கை மீதான விவாதத்தை எந்தெந்த நாட்க ளில் நடத்துவது குறித்து அலுவல் ஆய்வுக்குழுவில் முடிவு செய்யப்படும். இதற்காக அலுவல் ஆய்வு குழு வருகிற 30 ஆம்தேதி காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத் தொடரும் தலைமை செயலகம் அமைந்துள்ள பேரவையில்தான் நடைபெறும். கலைவாணர் அரங்கத்தை விட சிறிய இடம் என்பதால் வசதி குறை வாகதான் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.