சென்னை, அக்.20- “ நாட்டிலேயே மிகவும் பாதுகாப்பான மாநில மாகவும், குற்றச் சம்பவங்கள் குறைவாக உள்ள மாநிலமாகவும் தமிழ்நாடு திகழ்கிறது” எனத் தெரிவித்துள்ளார் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநரும் காவல் துறைத் தலை வருமான சங்கர் ஜூவால். நம் நாட்டில் குற்றங்கள் தொடர்பான பல அளவுருக்கள் தேசிய குற்ற ஆவணக் காப்ப கத்தால் வரையறுக்கப்பட்டுள்ளன. அது கூறு வதன்படி, ஒரு லட்சம் மக்கள் தொகையில் 64.5 சதவீத குற்றங்கள் பெண்களுக்கு எதிரானது. இது தேசிய சராசரி. தமிழகத்தின் சராசரி 22.4 ஆக உள்ளது. தமிழ்நாடு பாதுகாப்பான மாநிலங்களில் ஒன்று என்பதை இதன் புள்ளிவிவரத்திலிருந்து அறிந்துகொள்ளலாம். நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான போ ராட்டங்கள், பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட் டங்களை தமிழ்நாடு கையாண்டுவருகிறது. தமிழகத்தில் ஜனநாயகம் உள்ளது என்பதற்கு இதைவிட வேறு என்ன அளவீடு வேண்டும். சட்டம் - ஒழுங்கு பிரச்சனைகள் வரும்போ தெல்லாம், நாங்கள், தலைமையகத்தில் உட னடியாக அவற்றைக் கண்காணிக்கிறோம். சில இடங்களில் கொலைகள் அதிகரித்துள்ளன. அல்லது குற்றங்கள் அதிகரித்துள்ளதாக சில இடங்களில் புகார்கள் எழுந்தன. இதுபோன்ற புகார்களை விசாரிக்கையில், அவை உண்மை யல்ல என்பதையும் கண்டறிந்துள்ளோம் என்று சங்கர் ஜூவால் தெரிவித்துள்ளார். போதைப்பொருள் எல்லா இடங்களிலும் கிடைக்கிறது என்ற கூற்றை நிராகரித்திருக்கும் காவல்துறைத் தலைவர், “காவல்துறை இரு முனை அணுகு முறையைக் கொண்டுள்ளது. விநியோகச் சங்கிலிகளை உடைத்துள்ளோம். விற்பனையை தடுப்பதற்கு முயற்சிகள் மேற் கொண்டுள்ளோம். கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை பெருமளவில் கைப்பற்றி யுள்ளோம். இதற்கென தனிப்பிரிவே செயல்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார். காவல்துறையின் அத்துமீறலைத் தடுப்ப தற்கான நடவடிக்கைகள் குறித்த கேள்விக்கு, பதிலளித்திருக்கும் அவர், “கடந்த ஓராண்டில் காவல் நிலைய மரணம் எதுவும் இல்லை. காவல் துறையின் அத்துமீறல் தொடர்பான குற்றச் சாட்டுக்கள் பதிவாகும் போதெல்லாம், சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட் அல்லது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் மூலம் உரிய விசாரணை நடத்தப்படுகிறது. காவல்துறையில் அத்துமீறல்கள் இருக்கக் கூடாது என்ற எங்களது கொள்கை தெளிவாக உள்ளது.
காவல்துறைக்கு கெட்ட பெயர் ஏற்படுத் தக்கூடாது என நாங்கள் அறிவுறுத்துகிறோம். அத்துமீறல்கள் எங்களின் கவனத்திற்கு வரும் போது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பல சந்தர்ப்பங்களில், காவலர்கள் இடைநீக்கம் செய்யப்படுகின்றனர். அல்லது பணியிலிருந்து நீக்கப்படுகிறார்கள் அல்லது அவர்கள் மீது கிரி மினல் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. காவல்துறையின் அத்துமீறல்களை ஊக்கு விக்க மாட்டோம். அவ்வாறு நடந்தால், அது எங்க ளுக்குத் தெரிய வரும்போது விசாரிக்கிறோம். நடவடிக்கை எடுக்கிறோம் என்றார். மாநில சைபர் கிரைம் பிரிவிற்கு (1930 என்ற எண்ணிற்கு) 800 முதல் 900 அழைப்புகள் வரு கின்றன. இருப்பினும் ரூ.1 கோடி செலவில் சைபர் கிரைம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. மென்பொருட்கள் தரப்படுத்தப்பட்டு வரு கின்றன. அவை மூன்று மாதங்களில் பயன் பாட்டிற்கு வரும். இந்திய தண்டனைச் சட்டம், காவல்துறை சட்டங்களின் கீழ் பதிவாகும் வழக்குகளை விட சைபர் குற்றங்கள் அதிகம். சைபர் கிரைமில் மிக முக்கியமாக குறிப்பாக நிதி மோசடி நடந்தால், பரிமாற்றத்தில் உள்ள பணம் உடனடியாக முடக்கப்படுகிறது. 48 மணி நேரத்தில் பல்வேறு நடவடிக்கைகள் வங்கிகளின் உதவியோடு மேற்கொள்ளப்படுகிறது என்றும் சங்கர் ஜூவால் கூறியுள்ளார். இந்து இணையதள தகவல்களிலிருந்து