மதுரை, ஆக.29-
தமிழகத்தில் சிறந்த கல்வி முறை உள்ளது என ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) துணை வேந்தர் பெருமிதம் கொண்டார்.
தியாகராஜர் கல்லூரி சாகித்திய அகாதெமி மற்றும் தமிழ்த் துறை இணைந்து நடத்திய “வள்ளலார் - 200” என்ற இரு நாள் கருத்தரங்கில் பேசிய ஜேஎன்யு துணைவேந்தர் சாந்திஸ்ரீ துளிப்புடி பண்டிட், “பல்வேறு காலகட்டங்களில், பழங்காலத்தி லிருந்தே தமிழ் மொழி பிரபலமாக இருந்துள்ளது. தமிழகத்தில் சமத்துவச் சூழலும், சிறந்த கல்வி முறையும் உள்ளது.
வள்ளலார் போன்ற மகான்கள் மொழி, இலக்கியம், கலாச்சாரம் ஆகிய வற்றில் மட்டுமின்றி, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டின் அவசியத்திலும் சிறப்பான பங்களிப்பைச் செய்துள்ளனர்.
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த ஆண்டு ஜேஎன்யுவில் உள்ள தமிழ்ப் பேரவைக்கு ரூ.5 கோடியும், இந்த ஆண்டு மேலும் ரூ.5 கோடியும் அளித்துள்ளார். ஜேஎன்யுவில் 2007- ஆம் ஆண்டு முதல் தமிழுக்கான சிறப்பு மையம் மூலம் மொழியைப் பரப்புவதற்காக பல நிகழ்ச்சிகளை நடத்தினோம்” என்றார்.
கருத்தரங்குகள் மூலம் இலக்கியம் மற்றும் மொழியை வளர்ப்பதில் தொட ர்ந்து முயற்சி எடுத்து வரும் சாகித்திய அகாதமியைப் பாராட்டிய அவர், வள்ளலார் பற்றி கற்றுக் கொள்ளவும், தங்களைத் தயார்படுத்திக்கொள்ளவும் இன்றைய தலைமுறையினருக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு என்றார். கருத்தரங்கிற்கு கல்லூரிச் செயலர் கே.தியாகராஜன் தலைமை வகித்தார். தினமணி ஆசிரியர் கு.வைத்தியநாதன் சிறப்புரையாற்றி னார். தமிழ் விமர்சகரும், பேராசிரி யருமான ஜி.ஞானசம்பந்தன் வாழ்த்து ரை வழங்கினார். சாகித்ய அகாதமி செயலாளர் கே.ஸ்ரீனிவாசராவ் வரவேற் றார். அகாதமியின் தமிழ் ஆலோசனைக் குழுமம் ஆர்.தாமோதரன், முதல்வர் டி.பாண்டியராஜா உள்ளிட்டோர் பேசினர்.