சென்னை, ஏப். 22- தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படு த்தப்பட்டோர் நலத் துறையின் 275 கல்லூரி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு இணையவழி நூலகம் அமைத்து கொடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரி வித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கொள்கை விளக்க குறிப்பை தாக்கல் செய்த அமைச்சர் ராஜ கண்ணப்பன்,” சமூக நீதியை நிலை நாட்டுவதிலும் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை திறம்பட செயல் படுத்தி வருவதிலும் தமிழ்நாடு நாட்டிற்கே வழிகாட்டியாக திகழ்கி றது”என்றார். பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினரின் சமூக கல்வி மற்றும் பொருளாதார நிலையை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை வகுத்து மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. அதேபோன்று பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் நலனுக்காக அரசு கொண்டுவரும் திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வரு கிறது
என்றும் கூறினார். நரிக்குறவர் நல வாரியத்தில் 14118 பேர் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளார்கள் என்றும் அவர்க ளுக்கு வழங்கப்பட்டு வரும் நலத் திட்ட உதவிகளையும் அமைச்சர் பட்டியலிட்டார். உறுப்பினர்களின் விவாதங்களுக்கு பதி லளித்து பேசிய அமைச்சர் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது, மாணவர்கள் குறைவாக உள்ள பள்ளி விடுதிகளை மறு சீரமைத்து தேவைப் படும் இடங்களில் 15 கல்லூரி விடுதிகள் ஒரு கோடியே 48 லட்சம் ரூபாய் செலவில் அமைத்துக் கொடுக்கப்படும். பள்ளி மாணவியர் விடுதிகளில் காலியாக உள்ள 3224 இடங்களில் கல்லூரி மாணவிகள் தங்குவதற்கு அனுமதிக்கப்படும். மதுரை மற்றும் தேனி மாவட்டங்க ளில் உள்ள 3 கள்ளர் மேல்நிலைப் பள்ளிகளில் ஒரு கோடியே 18 லட்சம் ரூபாய் செலவில் உண்டு உறைவிடப் பள்ளிகள் துவக்கப் படும். மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள இரண்டு கள்ளர் சீரமைப்பு உயர்நிலைப் பள்ளி பள்ளிகள் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்படும். 14 ஆம் வகுப்பு பயிலும் கள்ளர் சீரமைப்பு பள்ளி மாணவர்கள் மாநில அளவில் கல்வி சுற்றுலா அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்படும். தையல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றவர்கள் 10 நபர்களை இணைத்து ஒரு குழு, 25 குழுக்கள் ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் பிரிவு ஒன்று ஏற்படுத்தி தரப்படும். இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.