tamilnadu

img

சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க தமிழக அரசே, சிறப்புச் சட்டம் இயற்றுக!

சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க தமிழக அரசே, சிறப்புச் சட்டம் இயற்றுக!

மீண்டும் மீண்டும் அரங்கேறும் கொடூரம்; இளைஞர் கவின் படுகொலை!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட இளைஞர் கவின் செல்வகணேஷின் குடும்பத்தினரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் க. கனகராஜ், தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் கே.பி. ஆறுமுகம், மாநிலக்குழு உறுப்பினர் பி. பூமயில், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் டி. செல்லகண்ணு, மாவட்டத் தலைவர் சீனிவாசன், மாவட்டச் செயலாளர் கே. காசி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.எஸ். அர்ஜூணன்,  தா. ராஜா, த. சண்முகராஜ் மற்றும் ஒன்றியச் செயலாளர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

சென்னை, ஜூலை 29 - இளைஞர் கவின் செல்வகணேஷ் வரை சாதி ஆணவக் கொலைகள் நீண்டு கொண்டே போகும் நிலையில், தமிழக அரசு உடனடியாக சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: அதிர்ச்சியளிக்கும் படுகொலை தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகேயுள்ள ஆறுமுகமங்கலம் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சார்ந்த 27 வயதான இளைஞர் கவின் செல்வகணேஷ் திருநெல்வேலியில் சாதி ஆணவப் படுகொலை செய்யப் பட்டு உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது. இப்படுகொலையை சிபிஐ(எம்) மாநில செயற்குழு வன்மை யாகக் கண்டிக்கிறது. கவின் செல்வகணேஷ் சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தில் பொறி யாளராக பணிபுரிந்தவர். இவரும்- தற்போது சித்த மருத்துவராக- பாளை யங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வரும்-  சுபாஷினி என்பவரும் பல ஆண்டு களாக காதலித்து வந்ததாகவும், இதற்கு சுபாஷினியின் பெற்றோர்கள் ஒப்புதல் தராமல் தூத்துக்குடி வீட்டைக் காலி செய்துவிட்டு திருநெல்வேலிக்கு குடி பெயர்ந்ததாகவும் தகவல்கள் உள்ளன. சுபாஷினியின் பெற்றோர் சர வணன், கிருஷ்ணகுமாரி இருவரும் முறையே ராஜபாளையம், மணிமுத்தாறு பகுதிகளில் காவல் உதவி ஆய்வாளர் களாக பணிபுரிந்து வருகின்றனர். ஏமாற்றி அழைத்துச் சென்று படுகொலை செய்த கொடூரம் கவின் செல்வகணேஷின் தாத்தா  உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை  பெற்று வந்த நிலையில், சுபாஷினியிடம் கலந்தாலோசிக்க அவர் பணிபுரியும் மருத்துவமனைக்கு கவின் செல்வ கணேஷ், அவரது தாயார், தம்பி, மாமா ஆகியோர் சென்றுள்ளனர். அப்போது சுபாஷினியின் சகோதரனான சுஜித்,  தனது பெற்றோர் பேசுவதற்கு அழைத்த தாக கூறி, அழைத்துச் சென்று கவின் செல்வகணேசை வீட்டு வாசலில் அரி வாளால் சராமாரியாக வெட்டிப் படு கொலை செய்து விட்டு தப்பிச்சென்றுள் ளார். சம்பந்தப்பட்ட அனைவரையும்  கைது செய்ய வேண்டும்! தற்போது, காவல்துறையினர் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட சுஜித்  மற்றும் அவரது தந்தை- தாய் ஆகிய  மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்திருந்தா லும் சுஜித்தை மட்டுமே கைது செய்துள்ள னர். மாறாக, கொலைக்கு காரணமான அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இத்தகைய சாதி ஆணவக் கொலைகள் நிகழ்வதும், குறிப்பாக தென்மாவட்டங் களில் வன்படுகொலைகள் அதிகரித்து வருவதும் தமிழ்நாட்டிற்கு தலைக் குனிவை ஏற்படுத்தும் நிகழ்வாகும்.   சிறப்புச் சட்டத்தின் தேவையை உணர்த்தும் படுகொலைகள் ஏற்கெனவே இருக்கிற கிரிமினல் சட்டங்களே போதுமானது என்கிற அரசின் வாதத்தை தொடர்ந்து நடந் தேறும்  சாதி ஆணவக் கொலைகள் புதிய சட்டத்தின் தேவையை வலியுறுத்து கின்றன. எனவே, தென்மாவட்டங்களில் தொடரும் சாதிய வன்கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க உரிய நட வடிக்கை எடுப்பதுடன் உடனடியாக சாதி  ஆணவக் கொலைகளை தடுப்பதற்கான சிறப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டு மென்றும், படுகொலை செய்யப்பட்ட கவின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடும், அரசு வேலையும் வழங்கப் பட வேண்டுமென்றும் தமிழ்நாடு அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு வலி யுறுத்துகிறது. இவ்வாறு பெ.சண்முகம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.