தமிழக அரசின் நிதி - வருவாய் பற்றாக்குறை குறைக்கப்பட்டுள்ளது! அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
சென்னை, செப்.2 - ஒன்றிய பாஜக அரசின் நிதிப் பங்களிப்பு முறையாக இல்லாத நிலையி லும், தமிழ்நாடு அரசு அதனைச் சிறப் பாக எதிர்கொண்டுள்ளதாக நிதி, சுற்றுச் சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித் துள்ளார். தலைமைச் செயலகத்தில் நடை பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் தங்கம் தென்னரசு, கடந்த நான்கரை ஆண்டுகளில் பல தொலைநோக்குத் திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி இரட்டை இலக்க அளவில் வளர்ந்துள்ளதாகவும், வருவாய் பற்றாக்குறையும் குறைக்கப் பட்டு நிதிப் பற்றாக்குறையும் மூன்று சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார். பல்வேறு தேர்வாணையங்கள் மூலம் ஒரு லட்சம் பேருக்கு பணி வழங்கப்பட்டுள்ளது என்ற அமைச்சர், உலக அளவில் தொழில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாயிலாக ரூ. 10.28 லட்சம் கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 32.23 லட்சம் பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைகிடைக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளதாகவும் பெருமையுடன் கூறினார். 52.07 மில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதி உயர்ந்து உள்ளதாகவும், ஏற்றுமதி தயார் நிலைக் குறியீட்டில், தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். காலை உணவுத் திட்டம், விடியல் பயணம் திட்டம் ஆகியவை மிகப்பெரிய வர வேற்பைப் பெற்றுள்ளதாகவும், பல நெருக்கடிகளைத் தாண்டி மக்கள் நலத் திட்டங்களை அரசு நிறைவேற்றி வருவ தாகவும் கூறினார்.