சென்னை,மார்ச் 19- தமிழ்நாடு அரசு சட்ட மன்றத்தில் தாக்கல் செய் துள்ள வேளாண் நிதிநிலை அறிக்கை வரவேற்பும், ஏமாற் றமும் நிறைந்தது என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கருத்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: வேளாண்மைக்கென்று தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவது வர வேற்கத்தக்கது. அதிகமான மக்களின் வாழ்வாதாரமாக வும், வேலைவாய்ப்பு வழங் கக்கூடிய துறையாகவும் இருக்கக் கூடிய வேளாண் மை துறைக்கு நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை. கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூ. 221.90 கோடி மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளது. விவசாய பரப்பளவை அதி கப்படுத்துவது, மானாவரி நிலங்களை மேம்படுத்து வது, சிறு தானியங்களுக்கு முக்கியத்துவம் அளித்தி ருப்பது, பனை பொருட்களு க்கு ஊக்கந்தருவது, உழவர் சந்தைகளை மேம்படுத்து வது, துவரை, எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியை அதிகரிக்க திட்டம், பயிர்க் காப்பீடு திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு, பட்டியல் சாதியி னர் மற்றும் பழங்குடியினர் விவசாயிகளுக்கு கூடுத லாக 20 சதவீத மானியம் வழங்கப்படும், இயற்கை வேளாண்மைக்கு முக்கி யத்துவம் போன்றவை வர வேற்கத்தக்கது. அதே நேரத்தில், விவசா யிகளின் வருமானத்தை பெருக்கவும், வேளாண்மை துறையில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வும், குறிப்பாக சிறு-குறு விவாயிகளுக்கான சிறப்பு திட்டங்கள் என்ற வகையில் குறிப்பிடும்படியாக எதுவு மில்லை. வேளாண் விளை பொருட்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றி விற்பனை செய்வதன் மூலம் விவசாயிகள் கூடுதல் வருவாய் ஈட்ட முடியும்.
கரும்பு விவசாயிகளின் கதி'
கரும்பு விவசாயிகளுக்கு மிகப்பெரும் ஏமாற்றத்தை இந்த நிதிநிலை அறிக்கை அளித்துள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் டன் ஒன்றுக்கு ரூ.2.50 மட்டுமே தமிழ்நாடு அரசு உயர்த்தி அறிவித்திருப்பது ஏற்கத்தக்கது அல்ல. பங்கீட்டு முறை சட்டத்தை ரத்து செய்து திமுக தனது தேர்தல் வாக்குறுதியாக டன் ஒன்றுக்கு ரூ.4000 விலை வழங்கப்படும் என்ற வாக்கு றுதியை நிறைவேற்ற வேண்டும். மூடியுள்ள கூட்டு றவு சர்க்கரை ஆலைகளை திறப்பது குறித்தோ, மேம் படுத்துவது குறித்தோ எந்த அறிவிப்பும் இல்லை. நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2500 தருவோம் என்ற வாக்குறுதி குறித்து அறிக்கை மௌனம் சாதிக்கிறது. கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை பாதுகாப்பாக வைப்ப தற்கான கிடங்குகள் அமைப்பது குறித்து எதுவு மில்லை. தார்ப்பாய் வழங்கு வது, உலர்களங்கள் அமைப் பது வரவேற்கத்தக்கது.'
வெறும் ரூ.80 கோடி
காவிரி டெல்டா பகுதிகளில் 964 கிலோமீட்டர் தூர் வாருவதற்கு 80 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கி யிருப்பது அப்பணியை முழுமையாக செய்ய போது மானது அல்ல. தூர்வாரும் பணி ஏப்ரல் முதல் துவங்கப் பட்டு மே மாத இறுதிக்குள் முடிப்பதை அரசு உத்தர வாதப்படுத்த வேண்டும். கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். குளிர் பதனக் கிடங்குகள் அமைக்க வேண்டும் என்ற விவ சாயிகளின் கோரிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கப் படவில்லை. வேளாண் இயந்திரங்கள் நியாயமான வாடகையில் விவசாயிக ளுக்கு கிடைக்க உத்தரவா தம் செய்யப்பட வேண்டும். மொத்தத்தில் வரவேற் பும், ஏமாற்றமும் நிறைந்த தாக இந்த வேளாண் நிதி நிலை அறிக்கை உள்ளது. இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.