நகைக்கடன் பெற புதிய விதிகள்: ரிசர்வ் வங்கி திரும்பப் பெற வேண்டும்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
சென்னை, மே 23 - வங்கிகளில் நகைக் கடன் பெற புதிய விதிகள் அறிவித்துள்ளதை ரிசர்வ் வங்கி திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலி யுறுத்தி உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செய லாளர் சாமி.நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் சாதாரண மற்றும் நடுத்தரப் பகுதி மக்களும், விவசாயி களும் வங்கிகளில் தங்களின் தேவை களுக்காக நகையை அடமானம் வைத்து கடன் பெற்று வருகின்றனர். குறிப்பாக விவசாயிகள் சாகுபடிக்காக நகையை அடகு வைத்து பயிர்க்கடன் பெற்று வருகின்றனர். இந்நிலையில், ரிசர்வ் வங்கி, வங்கி களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை யில், நகைக்கடன் பெறுவதற்கு புதிதாக 9 விதிகளை அறிவித்துள்ளது. அதில், அடமானம் வைக்கப்படும் தங்கத்தின் மதிப்பில் 75 சதவீதம் மட்டுமே கடன் வழங்கப்படும். 22 காரட் அல்லது அதற்கு மேல் தரம் உள்ள நகை களுக்கு மட்டுமே கடன் வழங்கப்படும். நகையை மீட்பதற்கான முழுத்தொகை யையும் வட்டியுடன் சேர்த்து கட்ட வேண்டும். வட்டியை மட்டும் கட்டி, கடனை புதுப்பித்துக் கொள்ளும் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே விவசாயிகள் வங்கி களில் 4 சதவீதத்தில் நகை கடன் பெற்று வந்த நிலையில், அந்த திட்டத்தையும் ரத்து செய்துவிட்டு, தற்போது சராசரி யாக 9.75 சதவீதத்தில் நகைக்கடனுக்கு வட்டி வசூலிக்கப்படுகிறது. இந்நிலை யில் ரிசர்வ் வங்கியின் புதிய உத்தர வால், விவசாயிகளுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். எனவே, நகைக்கடன் பெறு வதற்கு ரிசர்வ் வங்கி விதித்துள்ள புதிய உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வலியுறுத்து கிறோம். மேலும், நகையின் மதிப்பில் 80 சதவீதம் கடன் வழங்கிடவும், அனைத்து தங்க நகைகளையும் அடமானம் வைப்ப தற்கும், வட்டியை மட்டும் கட்டி நகைக் கடனை புதுப்பித்துக் கொள்ளும் முறை யையும் அமல்படுத்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.