சென்னை, பிப்.21- துபாயில் 192 நாடுகள் சார்பில் மார்ச் மாதம் மாபெரும் கண்காட்சி நடை பெறவுள்ளது. இதில், தமி ழகத்திற்கான தொழில் முத லீட்டை ஈர்க்கும் பொருட்டு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொள் கிறார். கண்காட்சியில் தமிழகம் சார்பிலும் ஒரு அரங்கு அமைக்கப்படும் என்றும் அதில், கைத்தறி, விவசாயம், சிறு தொழில் ஆகியவற்றுக்கு அழைப்பு விடுக்கப்படும் வகையில் அந்த அரங்கம் இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல்வராகப் பதவி யேற்ற பிறகு முதல்வர் மு.க. ஸ்டாலின் முதல்முறையாக வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளவிருப்பது குறிப்பிடத்தக்கது.
“லாலு ஜி ஒருவேளை பாஜகவுடன் கைகுலுக்கி இருப்பாரானால் அவ ரை அரிச்சந்திர மகாராஜா என்று சொல்லியிருப்பார் கள். ஆனால் அவர் ஆர் எஸ்எஸ் மற்றும் பாஜக வுக்கு எதிராக போராடு பவர். அதனால் சிறை தண்டனையை எதிர் கொண்டுள்ளார். பீகாரில் 80 ஊழல்கள் நடந்துள் ளன. சிபிஐ எங்கே போனது” என்று தேஜஸ் வி யாதவ் கேள்வி எழுப்பி யுள்ளார்.